Thursday, November 24, 2022

 ஆரூர்தாஸ் -நினைவலைகள் 

மரியா சிவானந்தம் 

அந்நாட்களில் வீதிகள் ஒலி மிகுந்தவையாகவே இருந்தன ..

"மனோகரா ,பொறுத்தது போதும் பொங்கி எழு "என்று கண்ணாம்பா குமுறிக் கொண்டிருக்க ,

"     வரி ,வட்டி ,கிஸ்தி ..யாரைக் கேட்கிறாய் வட்டி ? எதற்கு கொடுக்க வேண்டும் கிஸ்தி ? என்று   வீரபாண்டியன் கட்டபொம்மன் குரலில் சிவாஜி உறுமிக் கொண்டு இருப்பார் .

தொலைக்காட்சியின்  ஆதிக்கம் தொடங்கும் முன்பு ,கிராமங்களில்,  திருவிழா ,தேர் , மணவிழா எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலி பெருக்கியின் தன்னாட்சி செலுத்தியது  . காலை முதல் இரவு வெகு நேரம் தாண்டிய பின்பும்  ஒலிபெருக்கிகள் முழங்கிக் கொண்டே இருக்கும்.

 இனிமையான திரைப்பாடல்களும் , வலிமையான  வசனங்களும் சினிமாவில் கோலோச்சிய காலம் அது . புகழ் பெற்ற படங்களின் வசனங்களை சவுண்ட் சர்வீஸ் காரர் போட்டு விடுவார் .  பாடல்களும், உரையாடல்களும்  நம் செவி வழி புகுந்து நினைவில் நிற்கும் .

மனோகரா , வீரபாண்டிய கட்டபொம்மன் ,திருவிளையாடல் ,சரஸ்வதி சபதம் போன்ற ரெக்கார்டுகளைப் போலவே ஒரு  வசன ரெக்கார்ட் எண்பதுகளின் துவக்கத்தில் நம் தெருக்களில்  முழங்கியது .அது "விதி" 'திரைப்படம் . சுஜாதாவும் ,ஜெய்சங்கரும் கோர்ட்டில் மோதிக் கொள்ளும் வசனங்களுக்காகவே ஓடிய படம் அது. புகழ் பெற்ற அந்த வசனங்களை எழுதியவர் பழம் பெரும் திரை வசன கர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் . சமீபத்தில் மறைந்த  அவரது உங்களுடன் நினைவலைகளை பகிர்ந்துக் கொள்கிறோம் 


தமிழ் மணக்கும்  திருவாரூர் மண்ணில் தோன்றி புகழ்    வளர்த்தவர்  இருவர் , ஒருவர் நெஞ்சுக்கு நீதி சொல்லி குறளோவியம் தீட்டி தமிழன்னைக்குச் செம்மொழி சிறப்பினை அளித்த டாக்டர் கலைஞர், மற்றவர் திரைத்தமிழைச்  செம்மைப் படுத்தி , தமிழின் பெருமைக்கு பெருமை சேர்த்த  நம் "பாசமலர்' ஆரூர்தாஸ் . ஆம் பாசமலர் திரைப்படம் ஆரூர்தாஸை புகழேணியில் ஏற்றி வைத்த படம் .

யேசுதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்டவர். 1931 ஆம் ஆண்டு பிறந்து 91 ஆண்டுகள் வாழ்ந்தவர். இவர் தந்தை சந்தியாகு ,தாய் ஆரோக்கியமேரி. கரந்தையில் தமிழ்ப்புலவர் பெற்ற இந்த தமிழ்க்கடல் . மிக இள வயதில் ஆரூர்தாஸ் என்ற பெயருடன்  சினிமாவில்  நுழைந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் திரைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். 


ஆயிரம் படங்கள்  அவற்றுள் நிறைய படங்கள் வெள்ளிவிழா படங்கள், நூறு நாட்கள் ஓடிய படங்கள் .சின்னப்பா  தேவரின் "வாழவைத்த தெய்வம் ' இவர் வசனம் எழுதி முதலாக வெளி வந்த படம், எனினும் நிறைய மொழி மாற்று படங்களுக்கு வசன உதவி செய்துள்ளார் .தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளராக இருந்தவர் சின்னப்பா தேவரின் அறிமுகத்தால் வசனகர்த்தா ஆனார்,

பாசமலர் படத்துக்கு வசனம் எழுத ஜெமினியும் , சாவித்திரியும்  ஆரூர்தாஸை சிவாஜியிடம் அறிமுகம் செய்து வைத்தனர் .மிகவும் இளைஞனாக இருக்கும் ஆரூர்தாஸின் மேல் சிவாஜிக்கு நம்பிக்கை வரவில்லை . அதை அறிந்த ஆரூர்தாஸ் 'உருவு கண்டு எள்ளாமை வேண்டும் 'என்று குறளையும் மடல் பெரிது தாழை ,மகிழினிது கந்தம்' என்னும் மூதுரை பாடலையும் எடுத்துக்காட்டி பேச , சிவாஜி பெரிதும் வியந்து ."இவனிடம் என்னவோ இருக்குடா ,ஒரு பாசமலர் இல்லை, பத்து பாசமலர்களை எழுதுவான்டா " என்று மனம் நிறைந்து பேசினார். அதன் பின் தொய்வே இல்லாத திரைவாழ்க்கை ஆரூரருக்கு அமைந்தது .

அவரே ஒருமுறை அளித்த நேர்க்காணலில் கூறியது போல 

"1959-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு அன்றைய சினிமா வானின் மிகச் சிறந்த இரு துருவங்களாகத் திகழ்ந்த, என்றைக்கும் ஈடு இணையற்ற `மக்கள் திலகம்', `நடிகர் திலகம்' இருவரையும் ஒரே சமயத்தில் என் முதுகில் சுமந்துகொண்டு முதல் குதிரையாக ஓடி, அன்னையின் அருளால் வெற்றிமேல் வெற்றி பெற்றேன்" என்பது போல  அவர்  . திரைப் பயணம் வெற்றி பயணமாகவே அமைந்தது . 

பாசமலர் மட்டுமன்றி , பார்த்தால் பசி தீரும் ,பார் மகளே பார் , புதிய பறவை, தெய்வமகன்  என்று பல படங்கள் இன்றும் ஆரூர்தாஸின் புகழைச் சொல்லிக் கொண்டே இருக்கும் . தாய் சொல்லைத் தட்டாதே ,வேட்டைக்காரன் போன்ற படங்கள் எம்ஜிஆருக்காக எழுதிய படங்கள் . பின்னர் ஜெயசங்கர் , ரவிச்சந்திரன், முத்துராமன் , கமல் ,ரஜினி என்று தொடர்ந்து எல்லா கதாநாயகர்களுக்காகவும் இவரது பேனா ஓய்வின்றி இயங்கியது . ஆரூர் தாஸ்.உதவி இயக்குனராக ,பாடலாசிரியராகவும் சில படங்கள் பணியாற்றி உள்ளார் .

தொடர்ந்த உழைப்பு இவருக்கு விருதுகளைக் குவித்தது .தன் திருவாரூர் பள்ளியின் சீனியரான   'கலைஞர் ' முதல்வராக இருந்த போது அவர் கரத்தால் கலைமாமணி விருது பெற்றவர் ஆரூர்தாஸ் .அறிஞர் அண்ணா விருது', கலை வித்தகர் பட்டத்துடன் கூடிய ஐந்து சவரன் பொற்பதக்கப் பரிசு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 80-வது பிறந்த நாளில் ‘சிவாஜி விருது'டன் கூடிய 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு' எனப் பல பரிசுகளும் விருதுகளும் பெற்று கௌரவிக்கப்பட்டார் 


அண்ணா , கலைஞர் ,இளங்கோவன்  போன்ற தமிழ் வித்தகர்கள் தன் எழுத்துக்களால் மாயாஜாலம்  செய்த தமிழ்த்திரையில் அவர்களைத் தொடர்ந்து  தன் வசனங்களால் பெரும் ,புகழும் பெற்றவர். பாசமலரில் சிவாஜி பேசும் வசனம் ஆரூர்தாஸின் தமிழின் பெருமைக்கு எடுத்துக்காட்டு 

``பொது நலம்... எது பொதுநலம்? பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா? புற்றுக்கு அருகே நின்று மகுடி ஊதுவது, நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா? காட்டிலே குழி பறிப்பது யானை ஓய்வு எடுப்பதற்கா? கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா? அல்ல... இதெல்லாம் `பிறர் துன்பத்தில் இன்பம் காண வேண்டும்' என்ற பேய் வெறி! அந்த வெறிதான் உனக்கும்”.



இறவாப்புகழ்     கொண்ட படங்கள் இவர் பெயரை என்றும் சொல்லிக் கொண்டே இருக்கும் , தமிழ்த் திரை உலகம் இருக்கும் வரை, தமிழ் மொழி வாழும் வரை         


--------------------


வெள்ளி விழா கண்ட வசனகர்த்தா!
திரையுலகில் வெள்ளிவிழா கொண்டாடிய கதை,வசனகர்த்தாக்கள் வெகு சிலரே! அன்றும், இன்றும், என்றும் புகழேணியில் இருக்கிறார் வசனகர்த்தா ஆருர்தாஸ்.அவரது வெற்றியின் பின்னணி என்ன? அவரே சொல்கிறார்.
‘வாழ வைத்த தெய்வம்’ படம்தான் அதற்கு முன்னா. சில எழுதியிருக்கிறேன். சென்னைக்கு வந்தபோது வசனகர்த்தாவாக மாறியது என் வாழ்க்கையில் நடந்த எதிர்பாராத நிகழ்ச்சி. தேவர் அவர்களை வசனம் எழுதும் விஷயமாக குத்தாலத்தில் சந்தித்துப் பேசினேன். அக் கம்பெனிக்கு என்னை சிபாரிசு செய்ததே ஜெமினி கணேசன் தான். தேவர் என்னை கோவைக்கு அழைத்துப் போய், ஆர்.எச்.ஆர்.ஓட்டலில் ரூம் போட்டுக் கொடுத்து வசனம் எழுதச் சொன்னார். அது தேவரின் நாலாவது படம். படத்தில் என்.வி.சுப்பையாவும், டி.எஸ்.முத்தையாவும் ஆடு புலி ஆட்டம் ஆடும் காட்சி, அதற்காக நான் எழுதிய முதல் வசனம் :
‘வெற்றி, வெற்றி. இந்த நாலாவது ஆட்டத்திலும் எனக்குத்தான் வெற்றி’ செண்டிமெண்ட்டாக இந்த வசனம் ரொம்பப் பொருத்தமாக அமைந்தது என்று தேவர் என்னை பாராட்டினார்.’
நீங்கள் வசனம் எழுதிய படங்களில் பெரிதும் திருப்தியளித்தது எது?
பாசமலர் சிவாஜி, ஜெமினி, சாவித்ரி போன்ற தலைசிறந்த நட்சத்திரங்கள் நடித்த படம் அது. வலுவான கதை அதன் ஜீவநாடி. பசுமையாக வசனங்கள் அமைய வேண்டும் என்று நான் பாடுபட்டு எழுதினேன். தவிர, ‘தெய்வ மகன்’ படத்தில் அந்த மூன்றுக்கும் ஏற்றபடி வசனம் எழுத நேர்ந்தது. சிவாஜிக்கும் மூன்று ரோல்கள். அவருக்குப் பெருமை தேடித் தந்த படங்களில் அதுவும் ஒன்று. எம்.ஜி.ஆர். உணர்ச்சிகளைக் கொட்டி நடித்த, ‘பெற்றால்தான் பிள்ளையா?’ ’தாய் சொல்லைத் தட்டாதே’ இரண்டும் எனக்குப் பிடித்த படங்கள்.
மற்றவர்கள் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது?
சமீபத்தில் ‘சங்கராபரணம்’ படத்தை மூன்று முறை பார்த்து ரசித்தேன். இன்னும் பலமுறை பார்க்கப் போகிறேன். அப்படம் வேற்று மொழியில் இருந்தாலும் பேசுகிற வசனம் என்னவென்று நமக்கும் புரிகிறது. இது கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் டைரக்டரின் வெற்றி.
உங்கள் வசனத்தைப் பெரிதும் விரும்பும் கலைஞர்கள் யார்?
நடிகர்களில் ஜெமினி. அவர்தான் என்னைத் திரையுலகில் புகுத்திவிட்டவரே. டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தரும் நானும் ஒருவருக்கொருவர் விசிறிகள். என் வசனத்தில் அவருக்கு அலாதி நம்பிக்கையும், பிரியமும் உண்டு.
ஒரு படத்துக்கு வசனம் எழுத எவ்வளவு நாட்கள் ஆகும்?
அது கதையைப் பொறுத்தது. ஒரு வாரமும் ஆகலாம். ஒரு மாதமும் பிடிக்கலாம். படப்பிடிப்பின் ஷெட்யூல்களுக்கு ஏற்றபடி பகுதிப் பகுதியாகவும் எழுதுவேன். ஒரே சமயத்திலும் எழுதி முடிப்பேன்.
வசனங்களை எங்கே எழுதுவீர்கள்?
பெரும்பாலும் வீட்டில்தான். சில கம்பெனிகளில் ஓட்டலில் ரூம் போடுவார்கள். ஏவி.எம்.படங்களுக்கு வசனம் எழுத எனக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள கெஸ்ட் ஹவுசில் ‘ரூம்’ போட்டுக் கொடுப்பார்கள். அமைதியான இடம். எஸ்.பி.முத்துராமன் அப்போது உதவி டைரக்டர். நானும் அவரும் படத்துக்குப் படம் காட்சிகளை விவாதித்து ஒரு வாரம், பத்து நாட்கள் அங்கேயே தங்கி, வசனம் எழுதுவோம்.
எழுதும்போது மூட் தேவையா?
எனக்குத் தேவையில்லை. ஆனால் வசனம் எழுதும் போது எனக்கு அடிக்கடி தலைவலி வரும். அப்போது சற்று ஓய்வெடுப்பேன். தினமும் பகல் சாப்பாட்டுக்குப் பின் எனக்கு ஒரு மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். ராணுவ முறையில் செயல்பட்ட தேவர் கூட பகலில் நான் தூங்கி ஓய்வெடுக்க விட்டுவிடுவார்.
எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் செண்டிமெண்டாக ஏதாவது எழுதுவீர்களா?
வேளாங்கண்ணி மாதாவை நினைவிலிருத்தி பேப்பரில் ‘மாதா துணை’ என்று எழுதிவிட்டே நான் செய்யக் காரணகர்த்தாவாக இருந்தவர் திரு. தஞ்சை ராமையாதாஸ் தான்! அவர் கடவுளை நினைத்து ‘அவன் துணை’ என்று எழுதிவிட்டே வசனம் எழுதுவார். அந்த இன்ஸ்பிரேஷன் தான் எனக்கு….
நீங்கள் வசனத்தை ரசித்துப் பார்த்த வேறு படங்கள் ஏதாவது?
தப்புத்தாளங்களில் கே.பாலசந்தரின் வசனம் எழுதியிருந்த முறை என்னைப் பெரிதும் கவர்ந்தது. மற்றொரு மறக்க முடியாத படம் ‘பெக்கட்’ ஆங்கிலப் படம். கதை, வசனம், நடிப்பு எல்லாமே கவர்ந்தது.
நீங்கள் எழுதிய வசனத்தை ரசித்து நடித்த நடிகர் யார்?
நடிகர் திலகம் தான். ‘பட்டாக்கத்தி பைரவன்’ படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் நூறு பக்க வசனம் எழுதினேன். அப்புறம் நானே அதை ஐம்பது பக்கமாக்கினேன். அந்தப் படத்துக்கு அத்தனை வசனமும் தேவை.
அந்த வசனம் பூராவும் நடிகர் திலகம் சிவாஜி ரசித்து ரசித்துக் கேட்டு நின்று கொண்டே பேசினார். மறக்க முடியாத


காலமும், விதியும் இணைந்து என் கரங்களைப் பிடித்து, கரந்தை தமிழ்க் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, சென்னை கோடம்பாக்கத்திற்குக் கூட்டி வந்து 1953-ல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் மாற்றுமொழியிலிருந்து தமிழாக்கம் செய்வது ஆகிய கலைகளில் கை தேர்ந்தவராகவும், புகழ்பெற்றவராகவும் விளங்கிய `அமரகவி’ தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளராகச் சேர்த்து வைத்தது.

அப்போது எனக்கு வயது 22. என் மாதச் சம்பளம் ஐந்து பத்து ரூபாய் நோட்டுகள்! என் ஆரம்பத் திரைப்பட ஆசான் ஆன அவர்தான் என்னை ‘ஆரூர்தாஸ்’ என்று அழைக்க ஆரம்பித்து, அவருடைய ஆசீர்வாதத்தினால் அதுவே நிலைத்து வெளிச்சம் பெற்று விளங்குகின்றது. 




பொது நலம்... எது பொதுநலம்? பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா? புற்றுக்கு அருகே நின்று மகுடி ஊதுவது, நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா? காட்டிலே குழி பறிப்பது யானை ஓய்வு எடுப்பதற்கா? கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா? அல்ல... இதெல்லாம் `பிறர் துன்பத்தில் இன்பம் காண வேண்டும்' என்ற பேய் வெறி! அந்த வெறிதான் உனக்கும்”.

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...