Sunday, March 14, 2021


வெற்றித்திலகம் - ஸ்வாதி .மோகன் 

மரியா சிவானந்தம் 





கோடிக்கணக்கான ஆண்டுகளாக  விரிந்து கிடக்கும் அண்டப் பெருவெளியின் அற்புதங்கள் மனிதனுக்கு அதிசயங்கள்  கொட்டிக் கிடக்கும் சுரங்கமாகவே இருக்கிறது. வெற்றுக்கண்ணால் பார்த்தவர்கள், தொலைநோக்கியைக் கண்டு பிடித்த பின் வான்வெளியை  மேலும்  உற்றுநோக்க தொடங்கினார்கள் .அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர வளர விண்வெளித்   துறை மென்மேலும் வளர்ந்தது .  அமெரிக்கா ,பிரிட்டன் ,ரஷ்யா போன்ற நாடுகள் விண்வெளி  பயண திட்டங்களை வகுத்து அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது .இந்தியாவும்  வல்லரசுகளின் வரிசையில்  விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு ,சந்திரயான் போன்ற வெற்றிகரமான விண்வெளி கலங்களை அனுப்பி சாதனை செய்து   வருகிறது 

I don't think the human race will survive the next thousand years, unless we spread into space. There are too many accidents that can befall life on a single planet. But I'm an optimist. 

We will reach out to the stars.

என்கிறார் ஸ்டிபன் ஹாக்கிங்ஸ் .அவரது கருத்துக்கேற்பஇந்த பூமியில் அதிகரிக்கும்  மக்கள் தொகை பெருக்கம் ,   சூரிய குடும்பத்தின்  வேறு கோள்களில் வாழக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறதா என்னும் ஆராய்ச்சியைத் தொடக்கி வைத்தது .அந்த ஆராய்ச்சி   தொடர்ந்து நடந்துக் கொண்டே இருக்கிறது .  

இந்த ஆராய்ச்சியின் முதல் இலக்கு , சிவப்பு கிரகம்  அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் . பூமியின் அளவில் பாதி அளவே இருக்கும் செவ்வாயில் ,பூமியைப் போலவே மேகங்கள், வானிலை அளவுகள், பனிக்கட்டி மூடிய சிகரங்கள் என  உயிர் வாழ ஏதுவான நிலை இருப்பதாக நம்பப்பட்டு ,அதே அடிப்படையில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன .ரஷ்யா வைகிங், ஸ்புட்னிக் என்னும்  விண் ஊர்திகளை  செவ்வாய்க் கோளுக்கு அனுப்பியது .அமேரிக்கா மாரினர்களை அனுப்பியது . பல தோல்விகளுக்கு பின்1971 ஆம் ஆண்டு  1971 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாரினர்-9 செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை அடைந்து,வெற்றிகரமாக சுற்றி வருகிறது  . 1973 ஆம் ஆண்டு ரஷ்யா தொடர்ந்து மார்ஸ்-1 , மார்ஸ் -2  என்று வரிசையாக அனுப்ப , மார்ஸ் -5, மார்ஸ் -6  இரண்டும் வெற்றி பெற்ற விண்வெளி திட்டங்களாக அமைந்தன 

தொடர்ந்து இந்த ஆராய்ச்சிகள் வேகம் பிடித்தன .ஜப்பானும் தன் பங்குக்கு ஒரு விண்வெளிக்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பி,  தோல்வியைத் தழுவியது . 1996 ஆம் ஆண்டு, டிசம்பர் தேதி  அமெரிக்காவின் பாத் பைண்டர் (Path Finder ) விண்கலம் செவ்வாயில் Ares Vallis என்னும் இடத்தில் தரை இறங்கியது , ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் .


சென்ற வாரத்தில் ,இன்னும் ஒரு அற்புதம் நிகழ்ந்தது .அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளின் பெரு முயற்சியால் பெர்சிவரன்ஸ் ரோவர் என்னும் கலத்தை , ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் உள்ள ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கியுள்ளது. இந்த பெர்சிவரன்ஸ் ரோவர் இந்த மாதம் 18 ஆம் தேதி  ஜி.எம்.டி நேரப்படி   இரவு 20.55 செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து புதிய ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தையும் அது அனுப்பியுள்ளது .

இந்த நிகழ்வை  தொலைக்காட்சியில் நாம் பார்த்துக் கொண்டு இருந்த போது , கட்டுப்பட்டு அறைக்குள் இருந்து ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும்  ஒரு இந்திய முகத்தைக்  கண்டோம் . மாஸ்க் கொண்டு மூடிய முகத்தில் இரு கண்களும் சுழன்று ,கண்காணிக்க புருவங்களுக்கு மத்தியில் இருந்த சின்ன திலகம் நம் கருத்தைக் கவர்ந்தது .அவர் ஸ்வாதி மோகன் . என்னும்  விண்வெளி பொறியாளர் ..நாசாவின்  விண்வெளி    நிர்வாக  திட்டத்தின் வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாட்டு செயல்பாட்டுத் தலைவர் (Guidance and Controls Operations Lead )ஆவார்..பார்த்துக் கொண்டு இருந்த அனைவரும் பெருமிதத்தில் மெய் சிலிர்த்துப் போனோம் .


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் பெங்களூரூவைச் சேர்ந்தவர் . ஒரு வயது 

குழந்தையாக குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர் .இயல்பிலேயே நல்ல 

படிப்பாளியான ஸ்வாதி  குழந்தை நல மருத்துவராக  படிக்க விரும்பினார் . .ஸ்டார் ட்ரெக் என்னும் 

அறிவியல் தொடரைப் பார்த்தவருக்கு   ,விண்வெளி ஆய்வுத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது .பின்னர்

 கோர்னெல்  பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ,இயந்திர மற்றும் விண்வெளி பொறியியல் 

துறையில் ,பட்டம் பெற்றார் . மசாசூசெட்ஸ் தொழிற்நுட்பக்கழகத்தில் (MIT ) வானூர்தி அறிவியலில் 

முனைவர் பட்டம் பெற்றார் .2013 முதல் இவர் நாசாவின் ஜெட் புராபல்சன் ஆய்வகத்தில் (ஜேபிஎல்) திட்டப் பணிக்கான வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகள் செயல்பாட்டுத் தலைவராகப் பணியாற்றுகிறார்..

.  தரையூர்தியைச் (rover) சுமக்கும் விண்கலம் செவ்வாய்க் கோளிற்கான பயணத்தின்போதும், கோளின் மேற்பரப்பில் தரையிறங்கும் போதும் சரியான திசையில் நிலைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்வது அவர் பொறுப்பாக இருந்தது . பெர்சிவியரன்ஸ் தரை ஊர்தி (Perseverance Rover )  கட்டுப்பட்டு அறையில் இருந்து கண்காணித்துக் கொண்டு  ரோவர் செவ்வாயின் தரையைத் தோட்ட போது  போதுTouchdown is confirmed," என்று உலகுக்கு அறிவித்தார் .1969 ஆம் ஆண்டு நீல் ஆர்ம்ஸ்ட்ராங்  நிலவில் கால் வைத்த போது "That's one small step for a man, one giant leap for mankind."என்ற வரலாற்று சிறப்பு மிக்க வரி தந்த உணர்வை  ஸ்வாதியின் "touchdown is confirmed " கொடுத்தது .


EDL Sequence எனப்படும் (entry, descent, and landing (EDL) sequence) ஏழு நிமிடங்களில் நடத்தப்பட ஸ்வாதி மோகன் மற்றும் அவ்ருடன் பணியாற்றும் விண்வெளி அறிவியல் அறிஞர்களின் ஏழாண்டு கால கடின உழைப்பு இருக்கிறது . .கடந்த 2012-ம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, நாசா  செவ்வாய் கிரகத்தின் வேறொரு பள்ளத்தில்தரையிறக்கியது.இத்துடன் இணைந்து பெர்சிவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடும். 


இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனைக்கு இந்தியாவின் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதியின் திறமையும் ,அறிவும் ,திட்டமிடலும் துணை நின்றது, கல்பனா சாவ்லாவை நாம் மறந்திருக்க மாட்டோம் . இந்திய மண்ணின் புகழை அயல்நாட்டில் நிலை நாட்டும் சீரிய பணியைச் செவ்வனே செய்தவர்கள்  வரிசையில் ஸ்வாதியும் இடம் பெறுகிறார் .நமக்கு பெருமையாய் இருக்கிறது . 


இந்தியவம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் சரித்திரம் படைத்துள்ளார் .அவரைப் பாராட்டி வாழ்த்துகையில், இனி வரும் காலத்தில் இந்தியர்கள் அவர் போல சாதனை படைப்பார்கள் என்று  நம்புகிறோம்  . அந்நாளும் வரவேண்டும் .

அன்று இந்தியா வெற்றித்திலகம் சூடும் .


(VIKATAKAVI 24/2/2021)




 

ஓ ,,,ஓபோஸ் .

மரியா சிவானந்தம் 





உணவு உயிர் வளர்க்கும் மருந்து .உணவின் வழி உறவு வளருகிறது. அம்மா ,அக்கா ,ஆச்சி, அத்தை ,அண்ணி , மனைவி என்று ஒவ்வொரு உறவுக்கும் ஒரு கைமணம் உண்டு.  உறவுகளின் நினைவுகள், உணவுடன் தொடர்பு கொண்டவை  ,சமையல் ஆர்வம் உள்ளவருக்கு அடுப்படியே கோயில், அவர்கள் உழைப்பில் பிறப்பது உணவல்ல, நைவேத்தியம் 

சைவம் ,அசைவம் எது எடுத்தாலும் விதவிதமான உணவுகள் நம் இந்திய கிச்சனில் இருக்கிறது . வறுத்தல் ,பொறித்தல் , வதக்கல்  , அவித்தல் ,வாட்டல் என்று எத்தனை எத்தனை முறைகளில் நம் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன !   

சமைப்பதில் அதிக ஆர்வம் இருந்தாலும் , அதில் சில சிரமங்களும் உண்டு.நம் பாரம்பரிய சமையலில் நீளமான  தயாரிப்பு முறைகள்உண்டு .மேலும்    நம் சமையலை அறையில்   வித விதமான பாத்திரங்கள் உண்டு. . ஒரு முழு சமையலை முடித்த பின்   அந்த அடுக்களையை ஒழித்து ,பாத்திரங்களை கழுவி மீண்டும் தூய்மைப்படுத்துவது  பெரிய டாஸ்க். வேலைக்குப் போகும் பெண்கள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் பெண்களும்  திணறி போவது இங்குதான். அப்போது சமையல் சலிப்பு தரும் உழைப்பாக பார்க்கப் படுகிறது.  .இரண்டாவது சமையல் செய்ய செலவிடும் நேரம். காய்கள் நறுக்கி , மசாலா அரைத்து ,வேகவைத்து ,தாளித்து கொட்டி என்று பல வேலைகள் நேரத்தை விழுங்கும் 

இந்த இரண்டு சிரமங்களைக் குறைக்க உருவான சமையல் முறைதான் .ஒப்போஸ் சமையல் முறை . (One Pot One Shot ) என்பதன் சுருக்கமே ஓபோஸ் . இந்த முறையில் ஒரே சமையல் பாத்திரம் தான் உப்யோகிக்கப்படுகிறது  , பொரியல் ,சாம்பார் ,அவியல், பிரியாணி ,மீன்குழம்பு, இனிப்பு வகைகள் எல்லாவற்றுக்கும் ஒரே பாத்திரம் தான் .சமைக்கும் நேரம் சில நிமிடங்கள் தான் .. 

முதலில் இந்த முறையைக் கண்டு பிடித்தவரைப்பற்றி சில வரிகள்..

 .சென்னையைச் சேர்ந்த  திரு. ராமகிருஷ்ணன் .சில வருடங்களுக்கு முன்பு பஹ்ரைனுக்கு பணி நிமித்தம் சென்றவர், அங்கு தனக்கு பிடித்த இந்திய உணவு வகைகளை மிக குறைந்த நேரத்தில் செய்ய பல பரிசோதனைகளை மேற்கொண்டார் . அவரது நீண்ட முயற்சியில் உருவான இந்த ஓபோஸ் முறையை ,முகநூலில் ஒரு குழுவை உருவாக்கி அதை பகிர்ந்தார் .அதன் பின் ,opos பிரபலமாய் விட்டது .இப்போது முகநூலின் பெரிய குழுக்களில் 'ஓபோஸ்  குரூப் முக்கியமானது /

இந்த சமையல் பற்றி அறிந்து ,இந்த முறையைக் கடைபிடிக்கும் சுபா பிரியதர்ஷினி அவர்களை 'விகடகவி ' இதழுக்காக சந்தித்தோம் .அவர் ஒரு கண் மருத்துவர் .சக மருத்துவர் ஒருவர் ஓபோஸ்  பற்றி சொல்ல கற்றுக் கொண்டு அதை சுலபமாக செய்து வருகிறார். 



அந்த நேர்க்காணலின் ஒரு பகுதி இங்கே .

" சொல்லுங்க , இந்த ஒரு பாத்திர சமையலுக்கு ,என்ன பாத்திரம் உபயோகிக்கிறீர்கள்? என்றோம் நாம் .

"இதற்கு மேஜிக் பாட் என்று தனியாக விற்கிறார்கள் . நம் வீட்டில் 2லிட்டர் குக்கர் இருந்தால் ,அதையே நாம் உபயோகிக்கலாம் ."

"ஓ ,இது நம் குக்கர் சமையல்  போலவா  ?

"குக்கர் சமையல் வேறு , ஓபோஸ் சமையல் வேறு. இதில் ஆறு நிமிடத்தில் சிக்கன் பிரியாணி செய்யலாம் ,12 நிமிடத்தில் மட்டன் பிரியாணி செய்யலாம் .நிமிடத்தில் பாயசம் செய்யலாம் , ஒரே  சமயத்தில்  இரண்டு மூன்று டிஷ் செய்ய முடியும்."


எப்படி செய்வீர்கள் ?என்னென்ன விதி முறைகள் உள்ளன ?

'ஓபோஸ் முழுவதும் ;'ஹை பிளேம்' சமையல் தான். குக்கரின்  அடிப்பாகத்தில் எண்ணெய் அல்லது நெய்  ஊற்றி முதலில் அதை கொஞ்சம் தணலில் வைத்து தயாராக்கி கொள்ள வேண்டும் .பின்னர் உணவுப்பொருட்களை லேயர்களாக அமைக்க வேண்டும் .தண்ணீர் , எண்ணெய் எல்லாமே  அளந்து உபயோகிக்க வேண்டும் . அதற்கு டிஜிட்டல் தராசு இருக்கிறது காய்கறிகளில் இருக்கும் தண்ணீர்  சமையலை துரிதபடுத்துவதால், .மிக குறைந்த அளவு தண்ணீரே உபயோகிக்க வேண்டும். , 


" ஏதாவது சுலபமாக செய்யக்கூடிய குறிப்பு  சொல்லுங்களேன்"  


"சரி , கேரட் அல்வா ஓபோஸ் முறையில்  எப்படி செய்வது என்று சொல்கிறேன், . 1-4 கிலோ அளவு கேரட்டைத் துருவிக் கொள்ளவேண்டும் .அதன் பின் குக்கரில் 3 டீஸ்பூன் தண்ணீர் விட வேண்டும் .துருவிய கேரட்டை அதில் போட்டு , 200 கிராம் அளவு சர்க்கரையை அதன் மேல் லேயராக போட வேண்டும் .பின்னர்  இரண்டு டீ ஸ்பூன் பால் பௌடர் , இரண்டு டீஸ்பூன் நெய் ஊற்றி ,முந்திரி ,திராட்சை போன்ற நட்ஸை அதிலேயே சேர்க்க வேண்டும் .அடுப்பை பற்றவைத்து ஹை பிளேமில் குக்கரை சரியாக பத்து நிமிடம் வைக்க வேண்டும் ,  12-18 விசில்கள் வரும். நிமிடம் கழித்து காஸ் அனைத்து விட்டு ,ஸ்டீம் ரிலீஸ் செய்து ,குக்கரைத்  ,திறந்து , நன்கு கிளறி விட்டால் ,கேரட் அல்வா தயார் .

"இந்த ஓபோஸ் முறையால் என்ன பயன் ?" 

ஓபோஸ் அறிவியல் பூர்வமானது .நேரம்,  எரிபொருள் செலவு மிச்சம். நிறைய பாத்திரங்களை உபயோகிக்க வேண்டாம்,  உணவின் நிறம் ,சுவை வேறு லெவலில் இருக்கிறது .உணவுப் பொருளின் சத்துக்கள் வீணாவதில்லை.  சுத்தமான ,எளிய முறையில் விதவிதமாக செய்து அசத்தலாம் . சமையல் செய்யும் முறை சுலபமானது என்பதால் , குழந்தைகளே   செய்ய முடியும் . ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் சமைக்கும் நேரம்.மற்ற அளவுகள் மாறுபடும் . இருக்கிறது .கொஞ்சநாளில் ,அனுபவத்தால் ,எல்லா ஐட்டம்களும் அருமையாய் சமைக்கலாம் . குறிப்பா பாத்திரம் தேய்க்க  ஆளைத் தேட வேண்டாம்  "என்றார் .

மேலும் அவர் "  ஓபோஸ் மூலம் கீர் வகைகள் ,கேசரி ,  ஸ்வீட் வகைகள் , பனீர் உணவுகள் , பிரியாணி வகைகள் செய்யலாம் .முட்டைகள் சத்து அழியாமல் வேக வைக்கலாம் உப்புமா வகைகள் செய்யலாம் .கீரை மசியல் ,அவியல் , வட இந்திய உணவுவகைகள் சமைக்கலாம் " எல்லாமே சில நிமிடங்களில் முடிந்து விடும்" என்றார்  

"நிறைய விவரங்கள் தந்தீர்கள்" என்று நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டோம். , 

நிஜத்தில் சமையல் பற்றி அனுபவம் இல்லாதவர்களும், பேச்சலர்களும் இந்த முறையால் கற்றுக்கொள்ள முடியும் .முயற்சி செய்ய விரும்புவர்களுக்கு யூடியூபில் ஓபோஸ் வீடியோக்கள் நிறைய காண கிடைக்கின்றன .அடுக்களையில் மணிக்கணக்காக நின்று  களைத்து போகும் பெண்களுக்கு ஓபோஸ் ஒரு வரப்பிரசாதம் .மனைவிக்கு  உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம்  ஆண்களுக்கு சமய சஞ்சீவினி .

வாருங்கள்நண்பர்களே  , இந்த புதிய முறையில் சமைத்துப் பாருங்கள் 


(VIKATKAVI 27/2/2021)




 .





When I first spoke to Ramki (as he is fondly called), he said I shouldn’t attempt an article on OPOS cooking without having tried it. For the uninitiated, OPOS stands for One Pot One Shot, a cooking style developed by B Ramakrishnan from Chennai and his mini army of followers (from across the world) on Facebook.

In short, OPOS promises a chicken biryani in 6 minutes, a mutton biryani in 12 minutes. Sounds impossible? Challenge the group with a laborious dish and they will prove you wrong.

To begin with, these experiments were tedious, because he had to work over and over again to understand the perfect amount of heat and amount of water needed. The biryani took at least 100 trials. But the learnings were game-changing, he says.

Armed with just a 2-litre pressure cooker, a stove, measuring spoons and cups and a weighing scale, he started his experiments. Ramki claims that OPOS is the greenest and the cleanest way to cook. Ingredients are layered in a pressure cooker and then flash-cooked with very little water on high heat. Each dish has a very specific recipe and steps to be followed.


Over the last four years, OPOS has achieved a cultish reputation. The OPOS support group has about 23,000 active members on FB, whereas the OPOS School has about 13,000. The rules of the group are pretty strict. If you don’t contribute, you’re kicked out

 சிகரம் தொட்ட பெண்கள் 

மரியா சிவானந்தம் 



 

இது பெண்களின் நூற்றாண்டு ..

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை ஆசிரியை அல்லது செவிலியர் தொழிலே பெண்களுக்கு உரிய  பிரதான துறைகளாக இருந்தன . இன்று பெண்கள் சாதிக்காத துறை என்று எதுவும் இல்லை .'

யாதுமாகி நின்றாய் 'என்ற பாரதியின் வாக்குக்கு ஒப்ப , எத்துறையிலும் புகுந்து வெற்றிக்கொடி நாட்டும் சூப்பர் பெண்மணிகள் பத்துப் பேரை விகடகவி தேர்தெடுத்து அவர்களுக்கு இந்த மகளிர் தினத்தில் வந்தனம் செய்கிறது 

 அறிவியல் , பொறியியல் , மருத்துவர் , இயற்கை ஆர்வலர் , மலையேறுபவர் , விமானி , ,அரசியலில் சாதித்தவர்கள் என் பலதரப்பட்ட துறையில் சாதிக்கும்  பெண்களின் பற்றிய சிறு தொகுப்பு .15 வயது முதல் 105 வயது வரை உள்ள.

 இப்பெண் திலகங்கள் தடைக்கற்களை உடைத்து சிகரம் தொட்டவர்கள் . இவர்களைப் பற்றிய சிறு தொகுப்பு உங்கள் பார்வைக்கு 


..தமிழகத்தில் பிறந்து இம்மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர் பள்ளி மனைவி ஜெயலட்சுமி ,புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை என்னும் கிராமத்தைச்  சேர்ந்தவர் .Go4Guru என்னும் தனியார் நிறுவனம் நடத்திய அறிவியல் போட்டியில் பங்கு கொண்டு, பரிசாக அமெரிக்காவின் நாசாவுக்குச் செல்லும் வாய்ப்பைப்  பெற்ற 4000 பேரில் ஒருவர் .ஆனால் அந்த நான்காயிரம் மாணவரிடையே இவரை உயர்த்திக் காட்டுகிறது இவர் செய்த  செயல் . அமெரிக்கா செல்ல இவருக்கு அரசும் ,தொண்டு நிறுவனங்களும்  முன் வந்தன. அப்போது ஜெயலட்சுமி  தன் கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் கழிப்பறைக்கு கட்டித் தருமாறு கோரிக்கை வைத்து ,அதை நடத்தியும் காட்டியுள்ளார் . இந்த அழகிய  தமிழ் மகளின்  சமூக அக்கறை ,மக்களை புருவங்களை உயர்த்தச் செய்தது 


சக்தி நிவேதா ,தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் . மென்பொருள் துறையில் பணியாற்றும் பொறியாளர். பொள்ளாச்சியைச் சேர்ந்த இவர் மலையேற்றத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் . ஐரோப்பாவின் உயர்ந்த சிகரமான , 18000  அடி உயரமுள்ள எல்ப்ரெஸ் சிகரத்தையும் , தென் அமெரிக்காவின் 23000 ஆதி உயரமுள்ள சிகரத்தையும் ஏறியவர் .எல்ப்ரெஸ் சிகரத்தில் இந்தியக்கொடியை நாட்டிய இந்த வீரமங்கை , எவெரெஸ்ட்டின் உச்சியில்  கால் பதிப்பதே இலக்கு . 


இளவேனில் வாலறிவன் , தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் . ஆனால் வசிப்பது அகமதாபாத் நகரில் . துப்பாக்கி சுடும் போட்டியில் , சர்வதேச அளவில் 2018, 2019 ஆண்டுகளில்  தங்கம் வென்ற மங்கை . FICCI (Federation of Indian Chambers of Commerce & Industry) நிறுவனத்தால் 2020 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்னும் விருதைப் பெற்று இருக்கிறார் .அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது இவரது இலக்கு .


பத்மஸ்ரீ பாப்பம்மாள் , கோயம்புத்தூர் தெக்கம்பட்டிக்காரர். 105 வயதான இம்மூதாட்டி , இயற்கை  விவசாயத்தில் ஈடுபட்டு தன் நிலத்தை 'மாதிரி விளைபூமியாக ' மாற்றிக் காட்டியவர் . இவரது நிலம் மனையியல் மற்றும் வேளாண்மை பயிலும் மாணவர்க்கு களப்பயிற்சி தரும் தளமாக இருக்கிறது . ஆர்வமும் ,அர்ப்பணிப்பும் கொண்டவருக்கு வயது ஒரு தடை இல்லை என்று நிரூபித்த இந்த இளைஞிக்கு அரசு பத்மஸ்ரீ  விருது வழங்கி கௌரவித்தது.பெப்ரவரி 25 ஆம் தேதி கோயம்புத்தூர் வந்த பிரதமர் மோடி ,இவரை நேரில் சென்று வாழ்த்தினார் . 

கீதாஞ்சலி ராவ் , இந்த ஆண்டு டைம் இதழின் அட்டையை அலங்கரிக்கும் பெருமையைப் பெற்றவர் .இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த பதினைந்து வயது இளம் விஞ்ஞானி ,இவர் கண்டுபிடித்த Tethys என்னும் கருவியின் வழியாக தண்ணீரில் கலந்திருக்கும் காரீயத்தின் அளவை கண்டுபிடிக்க முடியும் . கார்பன் நானோ டியூப் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி ,நீரின் தன்மையை ஆராயும் இவரது ஆராய்ச்சிக்கு , 25000 டாலர்கள் பரிசும், அறிவியல் அறிஞர்களின் பாராட்டும் கிடைத்துள்ளது.  

ஆர்யா ராஜேந்திரன் , கேரளத்தைச் சேர்ந்த பெண் மேயர் .21 வயதில் திருவனந்தபுரத்தின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு , இந்தியாவின் இளைய மேயர் என்னும் பெருமையைப் பெற்று இருக்கிறார் . இவரது தந்தை எலெக்ட்ரிசியன் ,தாய் எல்.ஐ.சி ஏஜென்ட் .எளிய குடும்பத்தை சேர்ந்தவர் . இரண்டாம் ஆண்டு கணிதம் படிக்கும் இம்மாணவி மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளுடன் தன்னை இளம் வயதிலேயே பிணைத்துக் கொண்டவர் .மாணவராக போராட்டக்களத்தில் நின்றவர். திருவனந்தபுரத்தில் உள்ள முடவன்முகள் வார்டின் கவுன்சிலராக அவர் உள்ளாட்சித்   தேர்தலில் வென்றார்  .அவரது ஆளுமைக்கும் ,தலைமைப் பண்புக்கும் தகுதியான பதவியை அக்கட்சி அவருக்கு வழங்கி உள்ளது .

வி.எஸ் பிரியா அதே கேரளத்தைச் சார்ந்த மருத்துவர்,சிறப்பாக சொல்ல வேண்டுமானால் , கேரளத்தின் முதல் திருநங்கை மருத்துவர் .திரிச்சூரில்  பிறந்தவருக்கு  ஜினு சசிதரன் என்று  பெயர் சூட்டினர் பெற்றோர் ..  .பள்ளியில் படிக்கும் போதே தன் உடலில் ,மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்து ,கல்வி ஒன்றே தன்னை காக்கும் வழி என்று உணர்ந்து படித்து ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டம் , முதுகலைப் பட்டம் பெற்று மருத்துவராக ,பதிவு செய்துக் கொண்டார். பெற்றோரும்   குடும்பத்தவரும் துணை நின்றால் திருநங்கைகள் வழி இன்றி தவிக்க வேண்டியதில்லை என்பதற்கு பிரியா எடுத்துக்காட்டு 


கேப்டன் சோயா அகர்வால் , ஏர் இந்தியாவின் பெருமைக்குரிய பெண் விமானி. .பஞ்சாபின் பெண் சிங்கம்  . இவ்வாண்டு ஜனவரி 9ஆம் தேதி அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து .பெங்களூருவுக்கு 'இடை நிறுத்தா' விமானப் பயணத்தை தலைமை ஏற்று நடத்தியவர் .16000. கி.மீ  தூரம் கொண்ட இந்த பயணத்தில் ,விமானிகள் ,பணிப்பெண்கள் எல்லோருமே பெண்கள்தாம். வடதுருவத்தின் மேல்  பறக்கும் சாகச பயணத்தை எவ்வித இடையூறும் இன்றி முடித்து உலகின் கைத்தட்டலைப் பெற்றுக் கொண்டார் இந்த வீர மங்கை .


சாலுமருத திம்மக்கா ,கர்நாடக மாநிலத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர் ,சதமடித்தவர். பள்ளி சென்று கல்வி கற்காத திம்மக்கா கல்குவாரியில் வேலை செய்யும் தொழிலாளி . இவர் குடூர் -ஹுலிகல் நெடுஞ்சாலையில் 385 ஆலமரங்களையும்   8000 வேறுவகை மரங்களையும் நட்டு பராமரிப்பவர் .இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ  விருதை அளித்தது. 2020 ஆம் ஆண்டு கர்நாடகாவின்   மத்திய  பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து பெருமைப்படுத்தியது .வெளிநாட்டு சுற்றுசூழல் நிறுவனங்களும் இவருக்கு மரியாதை செய்தன . விருதுகள் குறித்த பெருமைகளை தன் மனத்தில் ஏற்றிக் கொள்ளாமல் தன் பணியைத் தொடர்கிறார் இந்த இயற்கையின் காதலி .


ஏஞ்செலா மெர்கெல் ஜெர்மனியின் பெண் அதிபர் .2005 ஆம்  ஆண்டு ஜெர்மனியின் முதல் பெண் அதிபரானவர் . இப்போது தொடர்ந்து நான்காவது முறையாக இப்பதவியில் இருந்து  ஆட்சி செய்கிறார் .. போர்ப்ஸ் இதழின் , உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளின் வரிசையில் முதலிடம் பிடித்தவர் . ஐரோப்பிய நாடுகளின் தன்னிகரற்ற தலைவராக வலம் வருபவர் . பொருளாதர வீழ்ச்சியில் சிக்குண்ட ஜெர்மனியை நிமிர வைத்தவர் .லட்சக்கணக்கான சிரியன் அகதிகளுக்கு அடைக்கலம் தந்தவர் . ஐரோப்பியாவின் 75 % மக்கள் தம் தலைவராக அடையாளம் காட்டும் தலைவி , 


பெண் இனத்தின்  பெருமைக்கு ச் சான்றாக இருக்கும் இப்பெண்மணிகள் , நாளைய உலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள் , 

இவர்களுக்கு இந்நாளில்   .விகடகவியின் பணிவான வணக்கமும் ,வாழ்த்துக்களும் .

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் 

 


(VIKTAKAVI 6/3/2021)








குறை ஒன்றும் இல்லை,  கண்ணா 

மரியா சிவானந்தம் 


 



முதலில் ஓர் உண்மைச் சம்பவம் 

அது எங்கள் கல்லூரி ஆண்டு  விழா .. சிறப்பு விருந்தினருக்காக வாசலில்  காத்துக் கொண்டு  இருக்கிறோம் . கார் வந்து நிற்கிறது .கல்லூரி முதல்வர் உட்பட,  பலரும் காரை நோக்கி ஓடுகிறார்கள். சரசரக்கும் பட்டுப் புடைவையில் , மூக்குத்தி மின்ன ,அரசி போல் ஒருவர் இறங்கி நிற்கிறார் .'பூங்கொத்து தந்து வரவேற்று அரங்குக்கு அழைக்கிறார்கள் .அவர் , "பின்னால் கணவர் நிற்கிறார் 'என்று கை காட்டுகிறார் .அதன் பிறகே  குழு அவரது கணவரை வரவேற்க திரும்புகிறது /   இருவரும் சேர்ந்து ஒன்றாக  கரவொலிக்கு நடுவில் அரங்குக்குள் நுழைகிறார்கள், . அவர் இந்தியாவின் இசை அரசி  என்று கொண்டாடப்பட்ட M. S சுப்புலக்ஷ்மி ,  .  பாரத் ரத்னா பட்டத்துக்கு சொந்தக்காரர் , ஐநாவில் பாடிய பெண் பாடகி 

இந்த சம்பவம் என் ஆழ்மனதில் பதிந்த சம்பவம் . "ஒரு புகழ்பெற்ற பெண்மணி  தான் செல்லும் இடங்களில் தன் கணவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பால் உணர்த்தியது" பற்றி பின் வரும் நாட்களில் கல்லூரியில் 'சிஸ்டர்ஸ் மகிழ்ச்சியுடன் புகழ்ந்துக் கொண்டே இருந்தனர்.. அன்று M.S  பாடிய 'குறை ஒன்றும் இல்லை ,மறை மூர்த்தி கண்ணா ' இன்று கேட்டாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய பொருளைக் கற்றுக் கொடுக்கிறது . 

சுப்புலக்ஷ்மி அம்மாவின் வெற்றிக்கும் ,புகழுக்கும் பின்னால் சதாசிவம்  அவர்களின் உழைப்பு  இருந்தது .அவர் எம்.எஸ் அவர்களுக்கு  ஊக்கம்  , உற்சாகம், தந்து ,அவருக்கு  நிழலாக இருந்து பாதுகாப்பு தந்தார் . அவரது இசை சாம்ராஜ்ஜியம் நாடு தாண்டி, கண்டங்கள் தாண்டி ,உலகம் முழுதும் பரவியதற்கு அவரது இசைத்திறமையுடன் அவரது கணவரின் உதவியும் ஒரு காரணம் .



சதாசிவம் .அவர்களைப் போலவே மனைவியின் திறன் வெளிப்பட உதவும்' துணை'வர்கள் பலர் . அரசியல் ,சினிமா , வணிகம் , சமூகம், எழுத்து,  விளையாட்டு என்று பல துறைகளில் இங்கு ஒளிர் விடும்  பெண் நட்சத்திரங்களுக்கு வானமாக விளங்கும் கணவன்மார்கள் உண்டு .


ஆந்திர  ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன்   அடிப்படையில் தலை சிறந்த மருத்துவர் . அவருக்கு அரசியல் ஈடுபாடு எழுந்த போது ,அவரது கணவர்  அவரை உற்சாகப்படுத்தி அவருக்கு உதவி செய்தார் .காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்த குமரி அனந்தனின் மகள் ,பிஜேபியில் சேர்ந்த போது மக்கள் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்பட்டனர். ஆயினும் தமிழிசை அரசியல் களத்தில் இறங்கி கலக்கினார் .அக்கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது அவரது அதிரடி பேச்சு ,'மீம்' களை சமூக வலைத்தளங்களில் நிறைத்தது .அவரோ,    .எதைப்பற்றியும் கவலைப்படாமல்  நிலையாக நின்று ஓர் ஆளுமையாக ஜெயித்தார் .அதற்கு பின்னணியில் மருத்துவர் சௌந்தராஜன் அவர்களின்  ஒத்துழைப்பும் ,பக்க பலமும் இருந்தது .



"செம்பருத்தி ,செம்பருத்தி பூவைப் போல பெண்ணொருத்தி"யை நாம் அறிவோம் . செம்பருத்தி படத்தில் இளம் நடிகை ரோஜா ,தென்னிந்திய திரைப்படங்களில் வெற்றிக்  கொடி கட்டியவர் . இயக்குனர் ஆர்.கே செல்வமணியின்  மனைவி ஆன பின்பும் , திரையில் சாதித்தவர் ,ஆந்திர அரசியலில் குதித்து எம்.எல் .ஏ  ஆகி இப்போது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் .ஒரு திரைப்பட விழாவில் செல்வமணி கூறியது நினைவுக்கு வருகிறது ."குடும்ப வாழ்க்கை  ஜெயிக்க வேண்டுமா ,'மனைவியிடம் தோற்றுப் போங்கள் .மனைவியை ஜெயிக்க வைத்து விடுங்கள் "என்கிறார் அவர். .வாக்குவாதங்களும்,  சச்சரவும் இல்லாத வாழ்க்கை இல்லை . ஆயினும் குடும்ப வாழ்க்கையில்  விட்டுக் கொடுத்து ,மனைவியை பொது வாழ்க்கையில் ஜெயிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கைக்கு செல்வமணி , நல்லதோர் எடுத்துக்காட்டு .




நாட்டுப்புற பாடல்களை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திய விஜயலட்சமி நவநீதகிருஷ்ணன் இந்த வரிசையில் இடம் பிடிக்கிறார் .நாட்டுப்புற பாடல்கள் மேல் அதீத ஆர்வம் கொண்ட  பேராசிரியை விஜயலட்சமி, தன்னைப்போலவே இத்துறையில் ஆர்வம் கொண்டவரையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நவனீதகிருஷ்ணனும் இவர் போலவே  தமிழ்த்துறை   பேராசிரியரே,  . இருவரும் இணைந்த பின் , விஜயலட்சுமி  நாட்டுப்புற பாடல் ஆராய்ச்சியில் மேலும் உத்வேகத்துடன் ஈடுபட்டார் .இருவரும் இணைந்து  மேடைகளில் ,தொலைக்காட்சியில் பாடல்களைப் பாடினார்கள் .10000 மேற்பட்ட இசைத்தொகுப்புகளை வெளியிட்டனர் . விஜயலட்சுமி பத்மஸ்ரீ விருது பெற்றார் . 



'ஒரு சிங்கம் முயலாகிறது 'என்று நாவல் எழுதினாலும் ,பத்திரிக்கைத் துறையில் ஒரு பெண் சிங்கம் போலவே சாதித்த எழுத்தாளர்   சிவசங்கரி.  பெண்கள் அதிகம் இல்லாத எழுத்துத் துறைக்கு வந்து , ஈரம் மிக்க எழுத்துக்களால் வாசகர்களைக் கவர்ந்தவர் . குடும்ப உறவுகள் , மனித மதிப்பீடுகள் ,சமூகம் சார்ந்த எழுத்துக்கள் தோய்வில்லா  நடை  இவரை முன்னணி எழுத்தாளராக்கியது .ஆயினும்  இவருக்கு பின்னணியில் இருந்தவர் இவர் கணவர் சந்திரசேகரன். பொறியாளரான இவர் தன் மனைவிக்கு கொடுத்த சுதந்திரமும் ,சூழலும் இவரை வெற்றிகரமான எழுத்தாளராக ,சமூக அக்கறை கொண்ட  பெண்மணியாக முன்னிறுத்தின . எண்பது வயது நெருங்கும் இந்த நேரத்திலும் 'சூரிய வம்சம் 'என்னும் சுயவரலாற்றுத் தொடரை எழுதி தன்  நீண்ட நாள் வாசகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் . 



சுதா நாராயணமூர்த்தி ,இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி என்ற ஒரு முகவரியே  போதும் .ஆனால் தனக்கொரு தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார் இந்த மகத்தான பெண்மணி .பொறியியலில் தங்கப்பதக்கம் வென்ற இந்த வெற்றி மங்கை, டெல்கோவின்  முதல் பெண் என்ஜினீயர்/ இன்போசிஸ் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றியவர் . அத்துடன் நிறைவு பெறாது,  கர்நாடகாவில் அரசுப்பள்ளிகளில் கணினியை அறிமுகப்படுத்தி ஒரு புரட்சியை சுதா விதைத்தார் . ஊரக வளர்ச்சி , வசதி இல்லாத ஏழை மக்களுக்கு வசிப்பிடம் அமைத்துத் தருவது என்று  பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார் . நல்ல எழுத்தாளர் , இவரது சமூகப் பணிக்கும், எழுத்துக்கும் எண்ணிறந்த விருதுகள் இவரை தேடி வந்தன .ஆலமரத்தின் நிழலில் இளைப்பாறி இருக்காமல் ,தானும் விழுதுகளை இறக்கி மரமாகி கனி கொடுக்கிறார் .இவர்  பின்னே இருக்கிறார் கணவர்  நாராயணமூர்த்தி . எளிமையின் வடிவான சுதா  பல வருடங்களாக புது சேலைகள் வாங்குவது இல்லையாம்  ( பெண்கள் நோட் பண்ணுங்கப்பா )




குடும்ப அமைப்பு குலையாமல், வீட்டின் தேவைகளைப் பூர்த்திச் செய்துக் கொண்டும் பெண்கள் பொது வாழ்க்கையில் சாதிப்பது பெரிய சவால் .அதற்கு உற்ற துணையாக கணவர் இருப்பது  எல்லோருக்கும் அமையும் வரம் அல்ல . தன்னை முழுமையாய் மறைத்துக் கொண்டு ,மனைவியின் பாதையில் நிழலாக நிற்கும் கணவர்கள் பட்டியலில் சின்னக்குயில் சித்ராவின் கணவர் விஜயசங்கர் ஒருவர் . ஆறு மொழிகளில் இடை  விடாது பாடும் இந்த தேசிய விருது பெற்ற பாடகியின் வெற்றிக்குப் பின் இருக்கும் அவர் கணவர் , ஒரே குழந்தையான நந்தனா இறந்த சோகத்தில் இருந்து மீளவும் உறுதுணையாக இருந்தவர் .

கர்நாடக சங்கீதத்தில் புகழ் பெற்ற  சுதாவின்  கணவர் ரகுநாதன், விளையாட்டு வீராங்கனை சாய்னா நெய்வாலின் காஷ்யப் , வணிகத்துறையில் சாதனை செய்யும் நீட்டா அம்பானியின் கணவர் முகேஷ் அம்பானி என நீளும் பட்டியல் பெண் சாதனையாளருக்கு 'துண' நிற்கும் தலைச்சிறந்த  ஆண்களை இனம் காட்டுகிறது .தங்கள் அன்பாலும் ,வழிகாட்டுதல்களாலும் தம் இணையரின் திறமை மக்கள் அரங்கில் வெளிப்பட இவர்கள் தம் உழைப்பைத் தருகிறார்கள் .

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்ற கூற்று உண்மையாகும் அளவுக்கு , பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆண் பல நேரம் இருப்பதில்லை .நமது சமூக அமைப்பு இன்னும் பல தடைகளை பெண்ணுக்கு  விதித்துள்ளது .அவற்றை உடைத்தெறிய சில அபூர்வ ஆண் மக்களே  துணை செய்கிறார்கள்.

பிரபலமானவர்களின் கணவர்களை பற்றி பேசும் போது   நம் போன்ற சாதாரண பெண்களின் கணவரைப் பற்றியும்  சொல்ல வேண்டும் .  மனைவியின் பணிக்கு உறுதுணையாக இருப்பவர்கள், குடும்பச்  சுமையைப் பகிர்ந்துக் கொள்பவர்கள், சவால்களை இணைந்தே எதிர் கொள்பவர்கள் .வெளி உலகம் அறியாத விதத்தில் என்று இவர்கள் இன்றும்  செயல்படுகிறார்கள் 

உண்மையான காதலுக்கு இலக்கணத்தை இந்த 'துணை'வர்கள் காலமென்னும்  ஏட்டில் எழுதிச் செல்கிறார்கள்,

இவர்கள் வணக்கத்துக்குரியவர்கள். 

(vikatakavi _13/3/2021)

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...