Friday, May 26, 2023

 கலெக்டர் கனவுகள் 

மரியா சிவானந்தம் 


உலகில்  கல்வியே ஒப்பில்லா செல்வம்.  மனிதன் வாழ்வில் உயர முதல் காரணமாக அமைவது  அவனது  கல்வி. 

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்இசையும் நாட்டும்உறும்கவலொன்(று)
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லை
சிற்றுயிர்க்கு உற்ற துணை

 

என்று நீதிநெறி விளக்கம்  கூறும் விளக்கம்   நாம் அறிவோம்


 இன்றைய சூழலில் மாணவர்  மதிப்பெண்களைத் துரத்துகிறார்கள், மருத்துவமோ, பொறியியலோ படிக்க  பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள் . வாழ்வில் வெற்றி பெற ,சாதனைகளைக் குவிக்க இந்த தொழிற்படிப்புகள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன. ஆனால் ,தொழிற்படிப்பின் உதவி இன்றி ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசின் ஆட்சிப்பணிகளில் அமர முடியும் ,.அதற்கு குடிமைத் தேர்வுகள் அவசியம் 

 
சென்னையின்  அண்ணாநகர் பகுதிக்கு சென்று  இருக்கீங்களா ?

அங்கு சாலைக்கு சாலை ஐஏஎஸ்  தேர்வுக்கான பயிற்சி மையங்களை நாம் காண முடியும் . அங்குள்ள பூங்காக்களை ஒரு வலம் வந்தால், எல்லா இடங்களிலும்  ஐஏஎஸ்  தேர்வுக்காக தங்களை தயாரிக்கும் இளைஞர்களையும்  காணலாம் . மாலை நேரம் தொடங்கி பார்க் மூடும் நேரம் வரை அவர்கள் நான்கைந்து பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து, குறிப்பேடுகளை வைத்துக் கொண்டு கேள்வி, பதில் எழுப்பியும் விவாதித்துக் கொண்டும் இருப்பது நாம் அன்றாடம் காணும் காட்சி. 

வெவ்வேறு மாவட்டங்கள் ,மாநிலங்களில் இருந்து  சென்னைக்கு வந்து தங்கி, உச்ச பட்ச உழைப்பை   முதலீடாக்கும் இவர்கள் கனவே  ஐஏஎஸ்  தேர்வு என்று அழைக்கப்படும் அரசு குடிமைப் பணிகள் தாம் .  இத்தேர்வில் வென்று அரசின் உயர் பதவிகளில்  அமர்வதே இவர் கனவு, வாழ்க்கை எல்லாம்  . இந்த இலக்கை நோக்கி இவர்கள் பசி, தூக்கம் துறந்து,  இரவு பகலாக பாடுபடுவதை நாம் காண்கிறோம். இவர்களைப் போலவே நாடெங்கும்   பல லட்சக் கணக்கான  இளைஞர்கள் கலெக்டர் கனவுடன் உழைக்கிறார்கள்  .
""
"ஐஏஎஸ்"   அல்லது "இந்திய ஆட்சிப்பணி" என்று நாம்  என்று பொதுவாக அழைத்தாலும்  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSE)  நடத்தும் இந்த தேர்வில் ஆட்சிப் பணி மட்டுமன்றி  பல துறைகளுக்கான   நிர்வாக அலுவர்களைத் தேர்வு செய்யப்படுகிறது. காவல்துறையின் IPS ,அயலுறவு துறைக்கு IFS,வருவாய் துறைக்கான IRS, தபால் துறைக்கான  IPS  போன்ற 21 வகை மத்திய உயர் பணிகளுக்குக்கான தேர்வுகளை இந்த UPSC தேர்வின் வழியாகவே தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். எனவே அரசுப் பதவிகளை அலங்கரிக்க நினைக்கும் படித்த இளைஞர்களின் முதல் சாய்ஸ் குடிமைத் தேர்வுகளே !

இந்த குடிமைத்தேர்வுகள்  மூன்று கட்டங்களாக நடத்தப்படுகின்றன. முதல்நிலை தேர்வு (Preliminary Examination ), முதன்மை தேர்வு (Main Examination), நேர்முகத்  தேர்வு (Interview) என்று மூன்று மூன்று நிலைகளைக் வெற்றிகரமாக கடந்த பின்பே ஓராண்டு பயிற்சிக்குப் பின்பே பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 

முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) 400 மதிப்பெண்களுக்கு இரண்டு தாள்களாக நடத்தப் படுகிறது . 100 கேள்விகள், இரண்டு மணி நேரம் கொண்ட முதல் தாளில் தினசரி செய்திகள் , பொது அறிவு , அரசியல் நிகழ்வுகள், இந்திய அரசியல் சட்டம், இந்தியாவின் புவியியல்   போன்ற பொது தலைப்புகளில் இருந்து கேள்விகள் தொடுக்கப்படும் .இரண்டாவது தாளில் திறன் அறிவு, தர்க்க ரீதியான அலசல் போன்றவற்றில் இருந்து 80  கேள்விகள் எடுக்கப்படும் .தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைப்பு உண்டு. இந்த இரண்டு தாள்களிலும் 33% எடுப்பவரே மெயின் பரீட்சைக்கு செல்ல முடியும் . 

முதன்மை தேர்வு (Main Examination) அடுத்த கட்ட பரீட்சை ஆகும். அகலமாக , ஆழமாக  தயாரிக்க வேண்டிய தேர்வு இது .மொழி அறிவு, ஆங்கில அறிவு, பொது அறிவு , அரசியல் என்று எல்லா துறைகளிலும் ஒருவரின் ஆழ்ந்த அறிவை சோதிக்கும் இந்த தேர்வு 2025 மதிப்பெண்களுக்கு நட த்தப்படுகிறது.
  • தாள் A  -இந்திய மொழிகளில் ஒன்று - 300 மதிப்பெண்  
  • தாள் -B -ஆங்கிலம் -300 மதிப்பெண்
  • மொழிப் பாடங்களில் பெறும் மதிப்பெண்கள் ரேங்க் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுவதில்லை .ஆயினும் 25% மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்  
தவிர கீழ்க்காணும் ஏழு தேர்வுகள்  நடத்தப்படும் 
  • தாள் 1: கட்டுரைகள் ,மாணவரின் மொழித்திறனையும் , சமூக பிரச்சனைகளில் அவரது  அணுகுமுறை இவற்றை சோதிக்கும் வகையில் கட்டுரையின் தலைப்புக்கள் இருக்கும் 
  • தாள் -2: இந்திய  வரலாறு ,கலாச்சாரம்,உலக  வரலாறு ,புவியியல் .சுதந்திர போராட்டம் , இந்தியாவின் சமூக கட்டமைப்பு , பன்முகத்தன்மை  
  • தாள் -3:இந்திய அரசியல் சட்டம் ,இந்திய அரசியல், இந்தியாவின் அயலுறவு , சமூக நீதி ,இந்திய அரசியல் அமைப்பின் அதிகாரங்கள் .
  • தாள் -4:இந்திய பொருளாதாரம் , சுற்றுச்  சூழல்,பொது பகிர்வு ,நிலைச் சீரமைப்பு சட்டங்கள் ,அறிவியல்,தொழிற்நுட்ப சாதனைகள் , தாராளமயமாக்கல் .எல்லை பாதுகாப்பு அதன் அச்சுறுத்தல்கள் 
  • தாள் -5 மாணவரின் மனநிலை, அணுகுமுறை , நாட்டில் எழும் பிரச்சனைகளுக்கு அவர் கூறும் தீர்வு ,அவரது எண்ணங்களை கருத்துக்களை விரிவாக சோதிக்கும் தாள் இது 
  • தாள் -6 மற்றும் தாள் 7 (optional Subjects)  இரண்டும் மாணவர் தேர்ந்தெடுக்கும் இரண்டு விருப்பப் பாடங்களில் இருந்து அவர்களின் ஆழமான அறிவை சோதிக்கும் அளவில் வினாத்தாள்கள் இருக்கும். 

இந்த  இரண்டு விருப்பப்பாடங்களை UPSC  தந்துள்ள பட்டியலில் இருந்து தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் . விவசாயம், கால்நடை வளர்ப்பு தொடங்கி  பொருளாதாரம் , புவியியல் ,வரலாறு , வேதியியல் ,கட்டடக்கலை , சட்டம் என்று 26 பாடப்பிரிவுகளில் ஏதேனும் இரண்டை ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் . இந்திய மொழி இலக்கியங்களை கூட ஒரு விருப்பதாளாக தேர்ந்து எடுக்கலாம். தமிழ்நாட்டில் முதல் ரேங்க் வாங்கி இருக்கும் சென்னை கொளத்தூரைச்  சேர்ந்த ஏ எஸ் ஜீஜீ அவர்கள் தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாக எடுத்து தேர்வு பெற்றார் என்பது மகிழ்ச்சியான செய்தி . 

இந்த ஏழு வினாத்தாள்களும் தலா 250 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது .

இந்த மெயின் தேர்வுகளில் வெற்றி பெற்றவர் நேர்க்காணல் எனப்படும் ஆளுமைத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள் . UPSC வாரிய உறுப்பினர்கள் அடங்கிய  குழு மாணவரின் அறிவுத்திறன் மட்டுமன்றி அவரது ஆளுமைப் பண்புகள், அணுகுமுறை, உணர்வுகள், இன்றைய  சமுதாய சூழலில் அவரது எதிர்வினைகள், இந்திய பொருளாதார வளர்ச்சி  ,மேலாண்மை,  போன்றவற்றில் மாணவர் காட்டும் ஆர்வம்,அவரது பார்வை, அவர் கூறும் தீர்வுகள்  இவற்றைப் பற்றி எல்லாம்  விவாத வடிவில் நடைபெறும் . UPSC பவனில் நடத்தப்படும்  இந்த நேர்க்காணல் மாணவர் இந்திய அரசின்  குடிமைப் பதவிகளை வகிக்க தகுதியானவரா என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது . நேர்க்காணலின் மொத்த மதிப்பெண் 275 .

வெற்றி பெற்ற மாணவர்  அவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை எனப்படும்  ரேங்க் தரப்படுகிறது .அந்த ரேங்கின் அடிப்படையாக வைத்தே IAS , IPS, IFS ,IRS என்று துறைகள் தரப்படுகின்றன .  பொதுப் பிரிவினர் 6 முறை இந்த தேர்வை எழுதலாம் .21 -32 வயது வரை எழுதலாம் . SC, ST மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது மேல் உச்சவரம்பு தளர்த்தப்படுகிறது .எத்தனை தரம் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற சலுகையும் அரசு அளிக்கிறது .

சமீபத்தில் வெளியிடப்பட்ட UPSC முடிவுகளில் 993 பேர்  வெற்றி வாகை சூடி உள்ளனர். தேசிய அளவில் முதல் நான்கு இடங்களைப் பெண்களே  கைப்பற்றி இருக்கிறார்கள். அவர்கள் இஷிதா கிஷோர்  (டில்லி ), கரிமா லோஹியா, உமா ஹாரதி ,ஸ்ம்ரிதி மிஸ்ரா ஆகியோர் ஆவர்  அப்பெண்கள் .சென்ற ஆண்டும் முதல் இடங்களைப் பெண்களே வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழகத்தை பொருத்த மட்டில் ஏஎஸ்ஜீஜீ முதல் மாணவராக தரவரிசையில் வருபவர் , தேசிய அளவில் 107 இடத்தை பிடித்துள்ளார். 993 பேர் தேசிய அளவில் தேர்ச்சி பெறும்   போது  தமிழகத்தை சேர்ந்தவர் 42 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றது நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது . 

தமிழக மாணவர்கள் மேலும் முயற்சியும் ,பயிற்சியும் பெற்றால் அவர்களால் முடியாதது ஒன்றும் இல்லை . பதினோராம் வகுப்பிலேயே இந்த குடிமைத் தேர்வுகளுக்கான விதையை விதைப்பது நல்லது . தினசரி செய்தித்தாள்களை படித்து உலக நிகழ்வுகள் ,நாட்டு நடப்பு  அறிந்துக் கொள்வதும் ,பொது அறிவை வளர்த்துக் கொள்வதும்  முக்கியம் . சமூகத்தின்  முக்கிய பிரச்சனைகளை அறிவதும், வரலாற்றை, கலாச்சாரத்தை  பற்றிய அறிவும் வேண்டும் . 

அகலமாக மற்றும் ஆழமாக படிக்க வேண்டும் . தினசரி செய்திகளை ஒரு   குறிப்பேட்டில்  எழுதும் வழக்கம் சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும் . போட்டித்  தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கையும் ,பொறுமையும் , விடா முயற்சியும் அவசியம்.

கலெக்டர்  மகன் கலெக்டர் ஆவது சிறப்பு என்றால் எலெக்ட்ரிசியன் மகள் கலெக்டர் ஆவது பெருமைக்குரிய செய்தி அல்லவா?   

இந்தியாவின் கடைக்கோடி கிராமத்து மாணவனுக்கும் UPSC தன் கதவுகளைத்  திறந்து வைத்துள்ளது, கலெக்டர் கனவுள்ள இளைஞர்கள் ஆர்வமுடன் நுழைந்திடுவீர் ,வெற்றி பெறுவீர் 


 மருத்துவமும்     ,பொறியியலும் படிக்க நம்  மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் . அவை இரண்டு மட்டுமே  முக்கிய படிப்புகளாக நினைத்து சிரமப்பட்டு உழைக்கிறார்கள் . மதிப்பெண்களைத் துரத்தி களைப்படைகிறார்கள் .ஆனால் தொழிற்கல்வி அல்லாத  இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு இருந்தால் ஐஏ எஸ்  படித்து கலெக்டர் ஆகவோ  அல்லது அரசின் முக்கிய துறைகளில் உயர் பதவியோ அடையலாம் 

  1. கதவுகளைத் 
  2. oc
21-32வளர்த்துக் 
sc ,st 37
obc 35
pWD - 10years 
minedu qualifn : Degree 
noof attempts  6 to 9
SC st unlimited 

  1.  Preliminary Examination (Objective type)
  2.  Main Examination 2025 personality test 275
  3. lanuage 300 min 25 marks
  4. Interview
prelims
Paper 1 -200mrks -100 ques2 2 hrs each 
paper 2 -200ks -80 ques

Main 
papaer A -300 maks
paper b 300\

Paper1 to VII -1750 marks
VI and VII -optional  subject 26 subjects -lilterature can be selcted 
online appluy upsconline.nic.in
1to7 papersf or ranking 



No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...