Thursday, December 28, 2023

 என்னோட முதல் பட்டு 


என்னோட முதல் பட்டு என் திருமணத்துக்கு கணவர் வாங்கியதுதான்.  இருவருமே மத்திய அரசுப்  பணியில் இருந்தவர்கள் .இருப்பினும் அதுவரை பட்டுச் சேலை வாங்கியது இல்லை ,  உடுத்திக் கொண்டதும் இல்லை . 27 வயத்தில் தான் என் முதல் பட்டு வாய்த்தது .

 எங்கள் திருமணம் ஜாதி ,மதம் மறுப்பு திருமணம் ,  இரண்டு பக்கமும்  எதிர்ப்பலைகள் எனவே எளிமையாக பதிவுத் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்தோம்.   ஆனால் சேலை மட்டும் பட்டுச் சேலையாக   இருக்க வேண்டும் என்று இருவரும் விரும்பினோம் .

வேலூர் மகாராணி சில்க்ஸ் என்ற கடையில் நாங்கள் இருவரும் சென்று வாங்கினோம். 38 ஆண்டுகளுக்கு முன்பு அதன் விலை எண்ணூறு ரூபாய் . மெரூன் கலரில் நேவி ப்ளூ சரிகை பார்டர் சேலை. உடலில் சின்ன சரிகை புட்டாக்கள் 

 அந்த சமயத்தில் அந்த வண்ண 'காம்போ'  பிரபலம் . சில திரைப்படங்களில் கதாநாயகிகள் அதே போல சேலை உடுத்தி , மணமேடையில் அமர்ந்தார்கள்  .எனவே பார்த்த உடனே அந்த சேலை பிடித்துப் போனது 2. 

ஆகஸ்ட் 21, 1985 எங்கள்  திருமணத்துக்கு உறவினர் வீட்டில் இருந்து தயாராகி  திருமணப் பதிவு அலுவலகம் போனோம் . அந்த பதட்டமான சூழலில் நான் என் சேலையை ரசித்துக் கொண்டு இருந்தேன். அந்த வழுவழுப்பு , முந்தானை மற்றும் பார்டரின் அழகும்  கொள்ளை கொண்டது . அதுவரை பட்டுப்புடவை கட்டி அறியாத நான் அந்த சேலையின் அழகில் சொக்கித்தான் போனேன் . என் நிறத்துக்கு அது பாந்தமாக இருந்தது .  பாட்டின் மென்மையும் ,மேன்மையும்  நெஞ்சுக்கு இதமாக இருந்தது .

பதிவு அலுவலகத்தில் பெண்கள் அருகில் வந்து தொட்டுப் பார்த்து விட்டு, விலையை விசாரித்தார்கள் .

2☻233333333333333333333333333336                   +

. அந்த சேலை மட்டுமே.அதே சேலையில் மாமியார் வீட்டுக்குச் சென்றோம் .அங்கு அவரது உறவினர்கள் எல்லோரும் சேர்ந்திருக்க  ஏகப்பட்ட வசவு,திட்டு . என் மாமியார் அழுத அழுகை இப்போதும் நினைவில் இருக்கிறது. இடையில் சற்று நேரம் அழுகையை நிறுத்தி விட்டு, "சேலை ரொம்ப நல்லா இருக்கே , எங்கே வாங்கினே ,என்ன விலை ??"  

ஒரு வழியாக அழுகையை நிறுத்தி  உப்புமா செய்து தந்து அனுப்பி வைத்தார்கள் 

இப்போது ஒரு அலமாரி நிறைய பட்டு சேலைகள் இருக்கிறது .ஆனாலும் அந்த சேலை ரொம்பவே ஸ்பெஷல் ,கல்யாண சேலை அல்லவா ? 

 உங்களை உயர்த்தும் உறுதிமொழி !

மரியா சிவானந்தம் 



புத்தாண்டு என்றாலே என் நினைவுக்கு வருவது "பிரதிக்கினை " என்னும் வார்த்தைதான்.

சிறுவயதில் கன்னியர்கள் நடத்தும் பள்ளியில் படித்தேன்.கல்லூரியும் கன்னியர்கள் நடத்துவதுதான். எனவே, எல்லா நேரமும் ஒழுங்கு, கட்டுப்பாடு, ஆன்மிகம் மற்றும்  கல்வி சார்ந்த படிப்பினைகளால் நம்மைத் துரத்திக் கொண்டே இருப்பார்கள். புத்தாண்டு பிறந்தால், நம்மை 'நல்ல பிரதிக்கினை எடு" என்று துரத்துவார்கள். முதலில் இந்த சொல்லை இளைய தலைமுறையினர் கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். பிரதிக்கினை என்றால் "உறுதிமொழி" அல்லது "தீர்மானம்" என்பதே பொருள்  .

அந்த சிறுவயதில் ஆழப்பதிந்த வார்த்தை பிரதிக்கினை அல்லது Resolution  , "இந்த புத்தாண்டில் நன்றாக படிப்பேன், பெரியவர்களிடம் கீழ்ப்படிவேன் . தவறாமல் சர்ச்சுக்குப் போவேன்.எல்லோருக்கும் உதவி செய்வேன். நேரத்தை வீணாக்க மாட்டேன், கணக்கு படத்தில் கவனம் செலுத்துவேன்  ' என்றெல்லாம் அவரவர் தம் மனப்போக்குக்கு ஏற்ப உறுதி மொழி எடுப்போம். "நல்ல பிள்ளையாக இருப்பேன்" என்பதுதான் பெரும்பாலானோரின் தீர்மானமாக இருந்தது. (நல்ல பிள்ளையாக இருப்பது என்றால் என்ன என்று எனக்கு இன்னமும்  தெரியவில்லை ) 

நிற்க, இந்த புத்தாண்டு தீர்மானங்களுக்கு நம் வாழ்க்கையை ஓரளவு மாற்றும் திறன் இருப்பதாகவே  நான் கருதுகிறேன் . நம் பலங்களை மேம்படுத்திக் கொள்ளவும் , பலவீனங்களை களைந்து எறியவும் ,நாம் வாழும் முறையைத் திரும்பிப் பார்த்து திருத்திக் கொள்ளவும்  இவை உதவுகிறது .

காலம் செல்ல செல்ல, வாழ்க்கை மாறுகிறது. நமது உறுதிமொழிகள் மாறுகிறது .ஆண்டுதோறும் புதிது புதிதாக தீர்மானம் எடுக்கிறோம் .உடல் சார்ந்த, மனம் சார்ந்த, பணி சார்ந்த இலக்குகளை நாம் நிர்ணயித்துக்    கொண்டு  அவற்றை அடைய நினைக்கிறோம் .

நம் உடல் நலனைப் பேணிப் பாதுகாக்க தினம் உடற்பயிற்சி செய்ய,நடைப் பயிற்சி செய்ய, ஜாக்கிங் செய்ய ,யோகா செய்ய என்று உறுதிமொழி எடுப்பதுண்டு, உடல் எடையைக் குறைக்க , உணவுக் கட்டுப்பாட்டை  கடைபிடிக்க, ஓட்டல் சாப்பாட்டை தவிர்ப்பது  என்றும் உறுதிமொழி எடுப்பது வழக்கம், பயணங்கள் மேற்கொள்ளுதல்  புகைப் பிடிப்பதை நிறுத்தவும், மதுப்பழக்கத்தை விட்டுத்  தொலைக்கவும் உறுதி மொழி எடுப்பவரும் உண்டு .

அதே போல மனவளம் பெருக்க தியானம் செய்தல் , ஆன்மிகத்தில்  ஈடுபாடு கொள்ளுதல் , தினப்படி பிரார்த்தனைகளை தவறாமல் செய்வது , புத்தகம் படித்தல், எதிர்மறை சிந்தனைகளை விலக்கி, நேர்மறை சிந்தனைகளை  வளர்த்துக் கொள்ளுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவும் உறுதிமொழி எடுப்பது உண்டு. அறம் சார்ந்த செயல்களில் ஈடுபடவும், தன்னால் இயன்ற உதவியைச் செய்யவும் உறுதி எடுப்பதும் நல்லது.

புதிதாக கற்றுக் கொள்ள ஆர்வம் இருப்பவர்கள்,தம் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள்,   வணிகத்தில் புதிய உயரத்தைத் தொட வேண்டும் என்று நினைப்பவர்கள் புதிய  மைல்  கற்களை  அடைய திட்டமிடுவர் .தாம் சாதிக்க நினைப்பதை ஒரு டைரியில் பதிவு செய்து , தம் முயற்சிகளை அத்துடன் ஒப்பீடு செய்து வருவார்கள் . கணினி காலத்தில் எல்லாவற்றையும் சிஸ்டம் பார்த்துக் கொள்கிறது , என்றாலும் அவ்வப்போது நம் வளர்ச்சியை பார்த்துக் கொள்ளலாம் .

ஏகப்பட்ட  உறுதிமொழிகள் எடுத்து விட்டு,எதையும்  கடைபிடிக்க  முடியாமல் போவதுண்டு .வருட முடிவில் நினத்துப் பார்த்தால் என்ன உறுதிமொழி எடுத்துக் கொண்டோம் என்பதே நினைவில் இருக்காது. வருட துவக்கத்தில் இருந்ததற்கும் , வருட முடிவில் இருப்பதற்கும் எவ்வித வேறுபாடும் இருக்காது.துவங்கிய இடத்திலேயே நாம் இருப்பது போன்ற  உணர்வு நமக்கு ஏற்படும் .

 .பதிலாக , குறிப்பான ஒன்று அல்லது இரண்டு உறுதி மொழியை எடுப்பது நல்லது . அது யதார்த்தமாக இருப்பது முக்கியம் . அந்த உறுதியை நிறைவேற்ற ஒரு திட்டம் வகுக்க வேண்டும் . அதற்காக நம்மையே வருத்துக் கொள்ளாமல்,இலகுவாக இருக்க வேண்டும். மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை  நாம் எந்த அளவில் அதைக் கடைபிடிக்கிறோம் என்று சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் . 

"உதாரணமாக சிக்கனமாக இருந்து சேமிக்க பழகுவேன் "என்ற தீர்மானம் எடுத்திருப்பவர் , தன் ஒவ்வொரு செலவையும் எழுதுகிற வழக்கத்தைக் கொள்ள வேண்டும் .தினமும் அல்லது வாரம் ஒருமுறையேனும் அந்த செலவுகளைப் பார்த்து ,எது அவசியமான செலவு எது தேவை இல்லாதது என்று பரிசீலனை செய்துப் பார்த்தாலே பணத்தை மிச்சப்படுத்த முடியும். 

நம் உறுதிமொழியைக் கடைபிடித்து வரும் போது  நாம் அதில்  முன்னேற்றம் காணும் போது நம்மை நாமே பாராட்டிக் கொள்ளவோ, சிறியதாக நமக்கு நாமே பரிசளித்துக் கொள்ளவோ தயங்க கூடாது .

மனிதன் எப்போதும் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டியவன்.  புதிது புதிதாக கற்றுக் கொள்ளவும் ,தான் அறிந்ததை பிறருக்கு கற்பிக்கவும் வல்லவன் .தன் குடும்பத்தில் இருந்துக் கொண்டே தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் உயர்த்தும் ஆற்றலைப் பெற்றவன் . நாள் இயல்புகளை வளர்த்துக் கொள்ளவும் , நல்ல பாதைகளை வகுக்கவும் வரம் பெற்றவன் .

புலரும் புத்தாண்டில்  நீங்கள் எடுக்கும் உறுதிமொழி உங்களை உயர்த்தட்டும் .

 உங்கள் சாளரங்களைத் திறந்துப் பாருங்கள் , 

உங்கள் கரத்தின் வழி தன்னை உயர்த்திக் கொள்ள காத்திருக்கிறது, இந்த உலகு 1

அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2024ல் ,அன்பு வாழ்த்துக்கள் .



Thursday, December 21, 2023

 திரை தந்த பாடல்கள் தொடர்ச்சி 


இன்னும் சற்று பின்னோக்கி பார்த்தால் பழைய கிறிஸ்துவ  பாடல்கள் சில அருமையாக  இருக்கின்றன 


1948 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சௌந்தரி .அதில் ஒரு பாட்டு 

"அருள்தாரும் தேவமாதாவே ,ஆதியே இன்ப ஜோதி" 

இன்று பலரும் அறிந்திடாத ஒரு பாடல் இது . ஒரு முழுமையான கிறிஸ்துவ படமாக அந்நாளில் எடுக்கப்பட்ட இப்படம் ஒரு ராஜா ராணி கதை. அக்கால இசையில் அமிர்தமாக இனிக்கும் பாடலைப் பாடியவர் பி.ஏ .பெரிய நாயகி 

என்னை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா இந்த பாடல் பலரும் கேட்டிருக்க கூடிய பாடல்தான் . இதுவும் தேவமாதாவை போற்றும் பாடல். 1955 ஆம் ஆண்டு வெளிவந்த மிஸ்ஸியம்மா படத்தில் வரும் இப்பாடலைப் பாடியவர் லீலா , பாட்டுக்கு தன்  உணர்வு  பூர்வமான நடிப்பால் உயிர் கொடுத்தவர் சாவித்திரி அம்மா .

'சிலுவையிலே மனது வைத்தால்
சிந்தனை தெளிவா..கும்
சிந்தையிலே அமைதி வந்தால்
வந்தது சுகமாகும்"  இந்த வரிகளைக் கேட்டு இருக்கிறீர்களா ?

"இயேசு நாதர் பேசினால்  அவர் என்ன பேசுவார்?" என்ற தாயே உனக்காக படப்பாடல் இது. மிக மெல்லிய  மயிலிறகால் ,காயம் பட்ட பகுதியை வருடிக் கொடுப்பது போன்ற வரிகளும் , இசையும் குரலும் .தாயே உனக்காக படத்தில் இந்த பாடலைப் பாடியவர் வசந்தா !

கண்ணே பாப்பா படம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்தது .அதில் சுசிலா பாடிய

"சத்திய முத்திரை கட்டளை இட்டது நாயகன் ஏசுவின் வேதம்

 கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது பாலகன் ஏசுவின் கீதம்"

அந்நாட்களில் இந்த திரைப்படம் ஒரு வெற்றிப்படம்  .இந்த பாடலும் பிரபலமான பாடல் 

"வாசல் கதவு மூடுவதில்லை ,தேவனின் அரசாங்கம் 

வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்'  

 இத்தனை அற்புதமான வரிகளை கண்ணதாசனைத் தவிர வேறு யாரால் தர இயலும் ?

இன்னும் ஒரு சுசிலாவின் பாடல் நம்  நெஞ்சில் நிறைந்த பாடல் 

"கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ " என்ற ]அன்னை வேளாங்கண்ணி படப்பாடல். கடினமான மனதையும் கலங்க வைக்கும் பாடல் இது . இசையும், வரிகளும் ஒன்றோடு ஒன்று இயைந்து இதயத்தை ஊடுருவும் பாடல் இது.

"மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் 

நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்"

 இது கிறிஸ்துமஸ் காலங்களில் தேவாலயங்களில் தவறாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் . 

"கண்ணே வா ,கண்மணியே வா    

விடிகாலை பொழுதாக ஒளி தர வா ' என்ற  பாடலும் குழந்தையேசுவைப் போற்றி பாடும் பாடல். . ஜேசுதாஸின் தேன் சிந்தும் குரலில் கொஞ்சி கொஞ்சி பாடும் பாடல் இது .

நம் நினைவில் நிற்கும் இந்த கிறிஸ்துவ பாடல்கள் இனிமையும் ,அழகும் சிந்தும் பாடல்கள் .காலங்கள் தாண்டி மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் கானங்கள் ."மதம் ' என்ற சொல்லை அழிப்பான் கொண்டு அழித்து 





மகத்தான மலைப்பொழிவு 

மரியா சிவானந்தம் 


மனித வாழ்வென்பது ஒரு  நதியின் பயணம் போன்றதல்ல. அது கடலில்  ஆடும் படகைப் போன்றது. சோதனை என்னும் சூறாவளியால்  அலைக்கழைப்படும்   இந்த உலக வாழ்க்கையில்  தோல்விகளும், துன்பங்களும் துரத்துவதும், நோயும், மரணமும் விரட்டுவதும், வறுமையும்  வாட்டமும்  நிறைந்திருப்பது வாடிக்கை .

ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையில் உற்ற துணையாகி ஊன்றுகோலாக நிற்பது நம் இறை நம்பிக்கை. குறிப்பாக  நமக்கு புத்துணர்ச்சியும், புதிய சக்தியும் தர வல்லவை புனித நூல்கள். கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் எனப்படும் வேதாகமம்  பல வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கி நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறது. 

நம் வாழ்வின்  உந்துசக்தியாக  இருக்க நல்ல பல கருத்துக்கள் இந்நூல் முழுவதும் விரவி உள்ளன  வேதாகமம்  இரண்டு பெரிய நூல்களை உள்ளடக்கியது .பழைய ஏற்பாடு (Old Testament), புதிய ஏற்பாடு (New Testament) என்ற இரு புத்தகங்களும் எல்லாருக்கும் ஏற்ற நற்கருத்துக்களை கொண்டு இருக்கும் கருத்துக் கருவூலம். உலகம் படைக்கப்பட்ட விதத்தில் தொடங்கி இயேசு பிறப்புக்கு முற்பட்ட காலம் வரை நிகழ்ந்தவற்றைக் உரைப்பது பழைய ஏற்பாடு. இயேசு பிறந்த பின் நிகழ்ந்தவற்றை  தொகுப்பது  புதிய ஏற்பாடு. இரண்டு புத்தகங்களும்  மனித வாழ்வு மேம்பட, அவன் துன்பத்தில் ஆறுதல் தர, உறுதிப்படுத்த,  நல்வழிப்படுத்த  நல்ல பல கருத்துக்களை நமக்கு அளிக்கிறது.

எல்லா பகுதிகளும் வாழ்வியல் தத்துவங்களைச் சொன்னாலும், இயேசுவின் மலைப்  பிரசங்கம் அல்லது மலைப்பொழிவு  உள்ளார்ந்த கருத்துக்களை எல்லோருக்கும் சொல்வது பகுதியாகும் இயேசுவின்  அரிய சொற்பொழிவு அடங்கிய இப்பகுதியை  மகாத்மா காந்தி அதை மிகவும் விரும்பிப் படித்ததாக சொல்வார்கள். அந்நாட்களில் இயேசு செல்லும் இடம் எல்லாம் மக்கள் வெள்ளம் அவரைப் பின்தொடர்ந்து சென்றது .அவர் திருவாய் மலர்ந்துச் சொல்லும் வார்த்தைகளுக்காக ஆண்களும், பெண்களும் ,குழந்தைகளும் காத்துக் கிடந்தனர் ,

இன்றைய இஸ்ரேலில்  The Mount of beatitudes என்று இப்போது அழைக்கப்படும் மலை மேல் ஏறி ,அங்கு அமர்ந்துக் கொள்ள இந்த சிறப்பான மழைப்பொழிவை இயேசு நிகழ்த்தினார்  

விவிலியத்தின் முதல் நூலான மத்தேயு  நூலில்  இந்த மலைப்பிரசங்கம் அழகிய கவிதை போல ஆற்றொழுக்கான நடையில் சொல்லப்படுகிறது .

  

     இன்று நாம் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம் ஒருநாள் இல்லாமல் போகும், தூய்மையான உள்ளத்துடன் வாழும் போது ,நம்மால் இறைவனை தரிசிக்க முடியும் .நீதியை  நிலை நாட்ட போராடுவோர் மறுவுலகை பெறுவார்கள் . சாந்தமும் , கனிவும் குணமாக கொண்ட மக்கள் இவ்வுலகை தம் உரிமைச் சொத்தாக்கி கொள்வர் . 

இந்த மழைப்பொழிவில் மேலும் பல நல்ல கருத்துக்கள் உள்ளன .

"உலகுக்கு உப்பு நீங்கள் ,உப்பு சாரமற்று போனால் வேறு எதனால் சாரம் பெற முடியும் ? உலகுக்கு ஒளி நீங்கள் . உடலுக்கு கண்தான் விளக்கு .கண் தெளிவாக இருந்தால் முழு உடலும் பிரகாசமாக இருக்கும் .மலைமேல் இருக்கும் ஊர் மறைவாய் இருக்க முடியாது .உங்கள் ஒளியை உலகத்தவர் முன் ஒளிர்ச்சி செய்யுங்கள் " இப்படி பல கருத்துக்களை மலைப்பிரசங்கம் உள்ளடக்கி இருப்பதால் , இது வேதாகமத்தின் மிக முக்கியமான ,சிறப்பான பகுதியாக இருக்கிறது .அன்பு ,கருணை , மன்னிப்பு , தன்னலம் இன்மை இவற்றை மறை பொருளாக  தன்னுள் வைத்துள்ளது 

 மனிதர் தரும் ஆறுதலை விட ,இறைவனின் சொற்கள் நமக்கு துன்பக் காலத்தில் பெரும்  ஆறுதலாக இருக்கிறது . உலக செல்வங்களின் மேல் பற்றைக் குறைத்து , மேன்மையான ஆன்மிக காரியங்களில் நம்மை ஈடுபட வைக்கிறது .  பொருள் பொதிந்த மலைப்பொழிவு பகுதி  ஒவ்வொரு கருத்தை அளிக்கிறது 


நம் அனைவரையும் பேறு பெற்றவர்களாக , ஆசி பெற்றவர்களாக மாற்றும் வல்லமை இந்த மகத்தான மலைப்பொழிவு பகுதிக்கு உண்டு. .

 

எளிய  மனத்தோர்  பேறுபெற்றோர்; 
      ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
துயருறுவோர் பேறுபெற்றோர்; 
ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
சாந்த குணமுள்ளவர்  பேறுபெற்றோர்; 
ஏனெனில் அவர்கள் பூமியை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
நீதியின் பால்  வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; 
 ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; 
ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
 ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; 
ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; 
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

  


Wednesday, December 20, 2023

மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறார் 

மரியா சிவானந்தம் 


"ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்”   (எசாயா 9:6), ஆயிரக்கணக்கான வருடங்களாக  மக்கள் எதிர்பார்த்து பிறந்த பாலன் இயேசு. பாவத்தில் மடிந்துக் கொண்டிருந்த மனித இனத்தை மீட்டு, நல்வழி காட்டி, அன்பை ,அமைதியை விதைத்து,  விண்ணுலகுக்கு வழி காட்டிய இறைமகன் இயேசுவின் பிறந்த நாள் கிறிஸ்துமஸ்  கொண்டாட இருக்கிறோம். உலகமே திருவிழாக் கோலம் பூண்டு அனைவரும் ஆனந்தம்  கலந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பண்டிகை இது .

"உன்னதங்களில் கடவுளுக்கு மகிமை , பூவுலகில் நன்மனத்தோருக்கு அமைதி" இதுவே கிறிஸ்துமஸின்  முதன்மை பாடல். இயேசு பிறந்த போது வான தூதர்கள் பாடிய இந்த பாடலை நள்ளிரவில் தேவாலயத்தில்  கிறிஸ்துவர்கள் இரவு வழிபாட்டின் போது பாடும் போது, ஆலய மணிகள் இடைவிடாது ஒலிக்கும்,  மின்விளக்குகள் அணைந்து எரியும். . வெடிச் சத்தம் காதைப்  பிளக்கும். கிறிஸ்துமஸ்க்கு சிறப்பான விதத்தில் அமைக்கப்பட்ட குடிலில் இயேசு பாலன் பிறந்ததைக் குறிக்க திருவுருவ சிலையை மூடி இருக்கும் துணி விலக , இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வை மீண்டும் நம் கண் முன் நிறுத்தி, நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் இரவு கிறிஸ்துமஸ் இரவு. 

இந்த விழாவுக்காக பலவித தயாரிப்புகள் நடைபெறும் .ஒரு மாதத்துக்கு முன்பே வேலைகள் துவங்கும். சிறிய வீடானாலும் சரி, பெரிய வீடானாலும் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளை அடிக்கப்படும். வீட்டின் முகப்பில் ஒரு அழகான ஸ்டார் மின் விளக்குடன் பொருத்தப்படும் வீடுகளில் குடில் அமைப்போர், வித விதமான குடில்கள் அமைப்பார்கள்.  முன்பு வண்ணக் காகிதங்களை வெட்டி , வீட்டில் ஒட்டுவர்,இப்போது. கடையில் விற்கும் அலங்காரப் பொருட்களே தோரணமாகிறது . 

அக்காலத்தில் கிறிஸ்துமஸ் மரத்துக்காக சவுக்கு மர கிளைகளை வெட்டி வைத்து அலங்கரிப்பார்கள். இப்போது பிளாஸ்டிக் மரம் வந்து விட்டது .எத்தனை உயரம் வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம் . கிறிஸ்துமஸ் முடிந்ததும் பிரித்து பத்திரப்படுத்துவர். குடில் பொம்மைகளும் பண்டிகை முடிந்தவுடன் எடுத்து காகிதத்தில் சுற்றி  வைத்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் . 

தேவாலயங்களும் தூய்மை செய்யப்படும். பித்தளையில் செய்யப்பட்ட உயர உயரமான மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள், பூச்சாடிகள்  எல்லாவற்றையும் இளம் பெண்கள் போட்டி போட்டுத் துடைத்து வைக்க, இளைஞர்கள் கோவிலை அலங்கரிப்பர் .முன்பெல்லாம்  சாடின் துணி தோரணங்களாக  கட்டுவார்கள். இப்போது அவை காணப்படுவதில்லை. ரெடிமேட் தோரணங்கள், நட்சத்திரங்கள், கிறிஸ்துமஸ் மரம் , குடில் என்று ஒவ்வொன்றையும் போட்டி போட்டு அலங்கரிப்பர். பாடல் பயிற்சி , திருவழிபாட்டு பயிற்சி என்று அனைவரும் தத்தம் பங்கை செய்வார்கள். கோவில் வளாகத்தில் உள்ள மரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சாண்டா கிளாஸ் வாழ்த்து சொல்லி ஆடிவர,  கிறிஸ்துமஸ்  இரவே ஒளியும், ஒலியும் நிறைந்ததாக இருக்கும் . 

வெளிப்புற அலங்காரங்கள் மட்டுமல்ல, அனைவரும் ஆன்மிக தயாரிப்பிலும் ஈடுபடுவர். டிசம்பர் முதல் வாரம் அல்லது நவம்பர் இறுதி வாரமே திருவருகைக் காலம் (Advent season) துவங்கும் .அந்த நான்கு வாரமும் கிறிஸ்து பிறப்பு ஒட்டிய கருத்துக்களும் ,பாடல்களுமாக இருக்கும் . இந்த காலகட்டத்தில் மிகுதியாக பேசப்படும் நம்பிக்கை , அமைதி , மகிழ்ச்சி,  அன்பு என்ற நான்கு  உண்மைகளைக் குறிக்கும் வகையில்  மெழுகுவர்த்திகள்  திருவழிபாட்டு துவக்கத்தில்  ஏற்றப்படும். நம்பிக்கை, அமைதி அன்பு குறிக்க ஊதா நிற மெழுவர்த்திகளும், மகிழ்ச்சியைக் குறிக்க இளஞ்சிவப்பு  மெழுவர்த்தியும் ஏற்றுவார்கள். டிசம்பர் 16 முதல் நவநாள் (Novena) எனப்படும் ஒன்பது நாள் ஜெபம்  தேவாலயத்தில் தினமும் ஜெபிக்கப்படும் .அழகான பாடல்களுடன் .

கிறிஸ்துமஸ் என்றாலே அன்பு, அமைதி , ஆனந்தம் தான் . இறைவனுடன்  உள்ள உறவை புதுப்பித்துக் கொள்ளவும் , உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான காலம்  இது. எல்லாவற்றுக்கும் மேலாக கிறிஸ்துமஸ் ஒரு பகிர்தலுக்கான பண்டிகை . நம்மிடம் உள்ளதை இல்லாதவருக்கு கொடுத்து மகிழ்வது இந்த பண்டிகை கால வழக்கம் . 

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி பல்கலைக்கழகத்தின்  கணினியியல் துறைத் தலைவர்(ஓய்வு) முனைவர். வசந்த கல்யாணி டேவிட்  நம்மிடம் பேசும் போது இந்த பகிர்தலைப் பற்றி கூறினார் .

"ஒரு மாத காலத்துக்கு முன்பே அனாதை குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்களை வாங்கி பேக் செய்வோம் . அவரவர் வயது , படிப்பு ,ஆர்வத்துக்கு தகுந்த படி  துணிகள் , அழகான எழுது பொருட்கள் ,கதைபுத்தகங்கள், அலாரம் கடிகாரம், பொம்மைகள், பென்சில் பாக்ஸ் என்று இருக்கும். அவர்களோடு பாட்டுப் பாடி ,நடனமாடி சாண்டாக்ளாஸ் கைப்பட அந்த பரிசுப்பொருள்களை கொடுப்போம். முதியோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்களில் கேரல் பாடல்கள் பாடுவோம் .வீட்டையும் தேவாலயத்தையும்  அலங்கரிப்போம் .கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் சென்று வழிபாடு முடித்து, அனைவரிடமும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொள்வோம்  .அன்று பிரியாணியும் ,கேக்கும் கொடுத்து மகிழ்வோம்" என்று தன் கிறிஸ்துமஸ் பகிர்வினைப் பற்றி கூறினார் . 

நன்று வசந்த கல்யாணி மேடம் 

'மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறார், நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்'. இந்த கொண்டாட்ட காலங்கள் நமக்கென உள்ளதை பிறருக்கு பகிர்ந்து வாழும் படிப்பினையைத் தருகிறது.தென் தமிழகமும் , சிங்கார சென்னையும் வெள்ளம்  கொண்டு  வந்த கொடுமையில் உடமைகளை இழந்து  , உணவின்றி தவிக்கிறார்கள். . அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி , மீட்டு வரும் வாய்ப்பை  இந்த கிறிஸ்துமஸ்  நமக்கு தந்துள்ளது .

பகிர்ந்து வாழ்வதே  பிறப்பின் பயன் .கிறிஸ்து இயேசு உணர்த்துவதும் அதுவே .


கிறிஸ்துமஸ் நன்னாள் வாழ்த்துக்கள் .


Thursday, December 14, 2023

 மரித்துப் போனதோ மனித நேயம் ?

மரியா சிவானந்தம் 

மிக்ஜாம் புயலும், கனமழையும் சென்னையைப் புரட்டி விட்டது.

 எங்கும் வெள்ளம் சூழ்ந்தது .மக்கள் வீடுகளில் சிறைப்பட்டனர். தண்ணீர் புகுந்த வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்கள் மீட்புப் படகுகளில்  ஏற்றிக் கொள்ளப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பது, அவர்களுக்கு உணவு அளிப்பது எல்லாமே கடினமான பணியானது.  தொடர்ந்த மின்வெட்டு மக்களுக்கு அச்சத்தை அளித்தது. 

அரசுப்  பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மின்வாரிய தொழிலாளர்கள், மாநகர அலுவலர்கள், காவல் துறையினர் ,தேசிய பேரிடர் மீட்புக் துறையினர்   என ஒரு பெரிய படையே மீட்பு பணிகளில்  ஈடுபட்டது. இவர்களுடன் தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது சமையலறை அமைத்து உணவு சமைத்து வழங்கினார்கள்.இப்போது Back to Home என்று மக்களுக்கு போர்வைகள், மளிகை சாமான்கள், உள்ளாடைகள் அவசியமான பொருட்களை வழங்கி வருகிறார்கள்.  மக்கள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாக இப்போதும் சொல்ல முடியாது.

'எரிகிற வீட்டில் பிடுங்கிய வரைக்கும் லாபம்" என்ற பழமொழி   இந்த சூழலில் உண்மையானது. இந்த சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு லிட்டர் பால் நூறு ரூபாய் வரைக்கும் விற்றவர் உண்டு.ரப்பர் படகில் ஏற்றி செல்ல அநியாய கூலி கேட்டதும் நடந்தது. மருந்து, காய்கறி,குடிநீர்  கிடைக்காமல் மக்கள் அவதிபடுகையில் விலைகளை ஏற்றி அநியாய லாபம் கண்டவர்கள் உண்டு. நன்றாக வாழ்ந்தவர்களுக்கு ஒரு வேளை உணவுக்கு கை ஏந்தி நிற்பது அத்தனை அவமானகரமானது என்பது காணொளிகளைப் பார்க்கையில் உணர முடிந்தது .

எனக்குத் தெரிந்த பெண் வழக்கறிஞர் வசந்தா சுசிலா, 45 வயது பெண்மணி சமூக ஆர்வலர், இலக்கியவாதி, பொது உடமை மேடைகளில் முழங்கியவர், பெண்களுக்கான போராட்டங்களை நடத்தியவர். இரண்டு மகன்களின் அம்மா.

 வானத்தைப் பிளந்து மழை கொட்டிய அந்த இரவில் திடீர் என்று சுசீலாவுக்கு நெஞ்சுவலி  ஏற்பட்டது .அவர் இருந்த கேகே நகர் பகுதியில் எங்கும் வெள்ளம் சூழ்ந்திருந்தது.அவர் கணவரால் சுசீலாவை எங்கும் எடுத்துச் செல்லவோ , மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை தரவோ முடியாத நிலையில் , சுசிலா இறந்தார் . அவர்  இறப்பு சமூகத்தின் இழப்பு 

இந்த வெள்ளத்தில்  இது போன்ற நிறைய கண்ணீர் கதைகள் மிதந்து வருகின்றன .அவற்றில் ஒன்று மசூத் ,சௌமியாவின் கலங்க வைக்கும் கதை 

மசூத் ,சௌமியா இருவரும் வடசென்னை, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த தம்பதிகள். மசூத் ஒரு கூலித் தொழிலாளி. அந்த மழைநாளில்  சௌமியாவுக்கு  பிரசவ   ஏற்பட்டது. மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்ல முடியாத  சூழ்நிலையில் அக்கம் பக்கத்துப் பெண்கள் வந்து பிரசவம் பார்த்தனர். தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் மீன்பாடி வண்டியில் ஏற்றி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு  சௌமியாவை எடுத்துச் சென்றார் மசூத். அது   பூட்டி இருக்க பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள் .அங்கு இறந்த குழந்தையைப் பிரித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் செல்ல , சௌமியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறந்த குழந்தையை மார்ச்சுவரிக்கு  அனுப்பி வைத்தனர் .

மசூத் குழந்தையை அடக்கம் செய்ய கேட்டு  மார்ச்சுவரியை அணுகிய போது அங்கிருந்த ஊழியர் அவரை அலைக்கழித்தனர். முதலில் போலீசிடம் கடிதம் வாங்கி வா என்று அனுப்பினார். போலீஸ் "நாங்க சொன்னதாக சொல்லு " என்று திருப்பி அனுப்பினார். அப்போதும் மார்ச்சுவரி ஊழியர் ரூ 2500 கொண்டு வரச்  சொல்லி  திருப்பி அனுப்பினார்கள் ஊழியர் .முதலாளியிடம் கடனாக வாங்கிய 5000 ரூபாயும் ஏற்கனவே செலவழித்து விட்ட  மசூத் நான்கு நாட்கள் நடையாக நடந்த பின்னரே இருந்த குழந்தை அவரிடம் கொடுக்கப்பட்டது . 

அதுவும் துணிகளில் சுற்றி அல்ல ,ஒரு அட்டைபெட்டையில் போட்டு கொடுத்து அனுப்பினார்கள் மார்ச்சுவரி ஊழியர். சமூக வலைத்தளமும் , ஊடகங்களும் இந்த மனிதாபிமானமற்ற செயலால் அதிர்ந்தன  . அதன் பின்னர் பணம் கேட்ட மார்ச்சுவரி ஊழியர்  பணி  இடை நீக்கம் செய்யப்பட்டார் . 

அரசு மருத்துவமனைகளில்  லஞ்சம் ஆழமாய் வேரூன்றி ,கிளை பரப்பி விஷ விருட்சமாகி  பல்லாண்டு காலமாகிறது . ஆனால் இறந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் அடைத்து தரும் செயல் கொடுமையானது. மனித உணர்வுள்ள யாரும் நினைக்கவும் முடியாத செயல் .மழை வெள்ளத்தில் மனிதம் துளிர்த்து , பல நல்ல சேவைகளை செய்யும் நேரத்தில் , மனிதம் மரித்ததோ என்று கலங்க வைக்கிறது இந்த சம்பவம்.காவலர் தயாளன் என்பவர் ஒரு குழந்தையை மீட்டு தூக்கி வரும் புகைப்படம் வைரலாகி   கவனம்  பெற்றது .

 

வெள்ளம் சென்னை வீதிகளில்  மட்டும் அல்ல , சில உள்ளங்களிலும்  நிறைந்து வழிகிறது கண்ணீராக !  



  


Thursday, December 7, 2023

சதுரங்க இளவரசி , இளவரசன் 

மரியா சிவானந்தம் 

புகழேணியில் ஏறிக் கொண்டு இருக்கும் யாரிடமும்  இந்த கேள்வியை முன் வைத்துப் பாருங்கள் ..

"உங்கள் வெற்றிக்குக் காரணம் யார் ?"

எல்லோருமே கை காட்டுவது அவர் அம்மாவைத்தான். மகன்களின் அல்லது மகள்களின் கனவைத் தனதாக்கிக் கொண்டு அதற்காக அயராது உழைப்பது அன்னையைத் தவிர வேறு யார்? 

இந்த ஆண்டில் செய்தித்தாளில் பெரிதும்  பேசப்பட்ட பெயர் நாகலட்சுமி என்னும் பெயர் . ஒப்பனை அற்ற முகம், மிக சாதாரண சேலை ஆனால் முகம் கொள்ளாத சிரிப்பும் , பூரிப்பும் கொண்டு ஊடக வெளிச்சத்தில் வலம்  வந்த தமிழ்ப் பெண்மணி அவர். 

நாகலட்சுமியின்  பெருமைக்குக் காரணம் இரண்டு கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி உலக செஸ் போட்டிகளில் வெற்றி வாகை சூட வைத்ததுதான். பிரக்ஞானந்தா , வைசாலி  என்ற இவரின் பிள்ளைகள் இருவரும் இந்தியாவின் பெருமையை , தமிழ் மண்ணின் திறமையை உலகறிய செய்ய வைத்ததில்  நாகலட்சுமி  தனிப்பங்கு வகிக்கிறார்.

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை மேலாளர் ரமேஷ் பாபு செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர் .அவர் தன் மகள் வைசாலி, மகன் பிரக்ஞானந்தா இருவருக்கும் அந்த விளையாட்டைச்  சொல்லி  தருகிறார். அதிக ஆர்வத்துடன்  செஸ்ஸை கற்றுக் கொள்ளும் இருவரும் வெகு விரைவிலேயே பன்னாட்டு செஸ் போட்டிகளில் கலந்துக் கொண்டு விருதுகள் பெற ஆரம்பித்தனர் . 

2012 ஆம் ஆண்டில் வைசாலி 12 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றார் .2015இல் 14 வயதுக்கு உட்பட்டோர் போட்டியிலும் வென்றார் . 2013 ஆம் ஆண்டு தன் 12வது வயதில் மாக்னஸ் கார்ல்சனை சென்னையில் நடந்த போட்டி ஒன்றில் தோற்கடித்த போது , வைசாலியை உலகே திரும்பி பார்த்தது. சமீபத்தில் ஸ்பெயின்  பார்சிலோனியாவில்  நடை பெற்ற  எல்லோப்ரோகாட் ஓபன் செஸ் தொடரில் துருக்கி நாட்டைச் சேர்ந்த FIDE (Federation Internationale des Echecs ) மாஸ்டர் டேமர் தாரிக் செல்ப்ஸ் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றார் வைஷாலி.இதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்ற வைஷாலி 2,500 பிடே ரேட்டிங் பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். 

இதனால் இந்தியாவிலிருந்து கிராண்ட் மாஸ்டர் பெற்ற  மூன்றாவது பெண்மணி என்ற பெருமை வைசாலிக்கு கிடைத்துள்ளது  கோனேரு ஹம்பி, ஹிரிகா த்ரேனவல்லி ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெண்ணாக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். 

  அடுத்த ஆண்டு கனடா டொராண்டோவில் நடைபெற உள்ள, உலக இறுதி போட்டிக்கு  தேர்வு செய்யும் candidate tournament 2024 போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார் . இவருடன் இந்த போட்டியில் பங்கு பெறும்  மற்றொரு போட்டியாளர் இவரது தம்பி  பிரக்ஞானந்தா. அக்கா எட்டடி பாய்ந்தால் தம்பி பதினாறு  அடி பாய்பவர் அல்லவா ? 

உலகின் மிக இளைய சர்வதேச  மாஸ்டர் பிரக்ஞானந்தா.  செஸ் உலக நட்சத்திரங்களான  பாபி பிஷர் , கார்ல்சன் போன்று இளம் வயதிலேயே க்ராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறுவர்களுக்கான உலக போட்டியில்  8 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில்  பிடே மாஸ்டர் வென்றார் . 2015ல் பத்து வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் வென்றார் . 2016ல் அங்கேரியின் செஸ் வீராங்கனை ஜூடித் போல்கரினை வென்று  இன்டர்நேஷனல் மாஸ்டர்  பட்டம் பெற்றார் .2017ல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார் . தொடர் பயிற்சியும் ,இடைவிடாத முயற்சியும் அவரை பதினெட்டு வயது நிறையும் முன்னரே உலக இறுதி போட்டிக்கு அனுப்பியது.இறுதிப் போட்டியில்  கார்ல்சன் வெற்றி பெற்ற போதும், பிரக்ஞானந்தாவின் ஆட்டத்திறனை உலகமே பார்த்து வியந்தது. "பிரக்ஞானந்தா" என்ற பெயர் தமிழ் மக்கள் உச்சரிக்கும் பெயரானது. இந்தியர்களின் பெருமை மிகு விளையாட்டு வீரன் ஆனார். 

 வைசாலி , பிரக்ஞானந்தா இருவரின் வியக்க தக்க வெற்றிக்குப் பின்னர்  ரமேஷ் பாபு, நாகலட்சுமி  இருவரின் கடின உழைப்பும், தியாகமும் உள்ளது .  ஒரு வங்கி மேலாளரின் வருவாயில் இரண்டு விளையாட்டு வீரர்களை உருவாக்குவது அசாத்தியமானது .  கால் ஊனமுற்ற ரமேஷ் பாபு அதிகம் பயணப்பட முடியாது என்பதால் தன் பிள்ளைகளுடன் போட்டிக்கு துணையாக உடன்  சென்று, அவர்களைக் கவனிப்பது உற்சாகம் தருவது என்று நாகலட்சுமியின் பங்கு அளப்பரியது .அவரது முயற்சிக்கு வைசாலியும், பிரக்ஞானந்தாவும் பெரும் புகழை அவருக்குப் பரிசாக தந்துள்ளனர். உலகில் candidate tournament போட்டியில்  முதன் முதலாக   பங்கு பெறும் "உடன் பிறந்தவர்" என்ற பெருமையை இருவரும் அவர் அன்னைக்கு ஈட்டி தந்துள்ளனர் .

உலக செஸ் போட்டியில் இறுதிப் போட்டியில் கலந்துக் கொண்டு,  உலகின்  இரண்டாவது செஸ் சாம்பியனாக  சாதனை புரிந்த பிரக்ஞானந்தா சென்னை திரும்பிய போது  அவரை வரவேற்க மக்கள் பெருந்திரளாக  கூடி இருந்தனர் . விளையாட்டுத் துறை ஆணையர் மிஸ்ரா உள்ளிட்ட தமிழக விளையாட்டுத்துறை வீரர்கள் , பள்ளி மாணவர்கள் என்று பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர் .மயிலாட்டம்,  ஒயிலாட்டம்  என்று வரவேற்பு தடபுடலாக  அரசு சார்பில் அளிக்கப்பட்டது .

அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில் பிரக்ஞானந்தாவை ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்தனர் .வண்டியில் ஏறிய உடனே பிரக்ஞானந்தா கீழே நிற்கும் தன்னுடைய தாயை கை நீட்டி அழைத்து வண்டியில் ஏற செய்தார். "இவரே என் சாதனையின் முதற்காரணம் ' என்று சொல்லாமல் சொல்லி அந்த பெருந்திரள் முன்பு  தாயை பெருமைப்படுத்தினார் . 

ஒரு அன்னைக்கு இதைவிட பெரிய பெருமை வேறென்ன இருக்க முடியும். தன் மக்களின் உயரத்தைக் கண்டு பெருமை கொள்ளும்  நாகலட்சுமி  அதை தன் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. பதக்கங்கள் , பட்டங்கள், விருதுகள், பணப்பரிசுகள் என்று குவிந்த போதும் அவர்   எளிமையாக இருக்கிறார் . எவரிடமும்  தயக்கமின்றி உரையாடுகிறார். தம் பிள்ளைகளின் சாதனையில்  தனக்கான பங்கைச் செவ்வனே செய்கிறார்.  அன்னைமார் அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது .

பாராட்டுக்கள் நாகலட்சுமி அம்மா. உங்கள் பிள்ளைகளால் நாங்களும் பெருமை கொள்கிறோம் .சதுரங்க மேடையில் இளவரசனாக,இளவரசியாக வலம் வரும் இவர்கள் இனி  வரும் போட்டிகளிலும் உலக சாதனை செய்து  விருதுகள் குவிக்க வாழ்த்துகிறோம் !! 





பிரக்ஞானந்தா 2013-இல் உலக இளைய சதுரங்க போட்டியில் 8 வயது பிரிவில் வென்று பிடே மாசுட்டர் என்ற பட்டத்தைப் பெற்றார். 2015-இல் 10-வயதுப் பிரிவில் போட்டியிட்டு வென்றார்.[10]

2016 இல், தனது 10 வயது 10 மாதம் 19 நாட்களில், வரலாற்றில் மிக இளையவராக அனைத்துலக சதுரங்க மாசுட்டரானார். அங்கேரியின் பிரபல சதுரங்க வீராங்கனை யூடித் போல்காரின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்து இச்சாதனையைப் புரிந்தார்.[11][12] 2017 நவம்பரில் உலக இளையோர் சதுரங்க வாகையாளர் போட்டியில் 8 புள்ளிகளுடன் நான்காவதாக வந்து தனது முதலாவது கிராண்ட்மாசுட்டர் நோர்ம் பட்டத்தைப் பெற்றார். 


emarkably, he also holds the distinction of being the youngest international master in the annals of chess. Praggnanandhaa’s list of accolades includes three world youth titles: U8 in 2013, U10 in 2015, and U18 in 2019.legendary figures like Carlsen and GM Bobby Fischer.

n July 2023, Praggnanandhaa achieved a noteworthy milestone by attaining a live rating of 2700 for the first time in his career. This achievement was a testament to his consistent growth and skill development.

fourth-youngest GM in history

 Federation Internationale des Echecs (FIDE)


.

இந்தியாவிலிருந்து கோனேரு ஹம்பி, ஹிரிகா த்ரேனவல்லி ஆகியருக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெண்ணாக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்.

நான் செஸ் விளையாட்டு விளையாட தொடங்கியபோது இருந்த இலக்கை அடைந்துவிட்டேன்"

2015ஆம் ஆண்டில் வைஷாலி முதல் சர்வதேச செஸ் போட்டியில் விளையாடினார். ஆசிய யூத் சாம்பியன்ஷிப் தொடரில் யு14 பிரிவில் விளையாடிய அவர் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றார்.


வைசாலி 2012 இல் அகவை 12 இற்குட்பட்டோருக்கான பெண்கள் உலக இளையோர் சதுரங்க வாகை, 2015 இல் அகவை 14 இற்குட்பட்டோருக்கான வாகை ஆகியவற்றை வென்றார்.[1] 2013 ஆம் ஆண்டில், தனது 12-ஆவது அகவையில், பின்னாளில் உலக சதுரங்க வாகையாளரான மாக்னசு கார்ல்சனைத் தனது சொந்த ஊரான சென்னையில் இருந்தபோது நடந்த ஒரு போட்டியில் தோற்கடித்தார்.[2][3]

2016 இல், வைசாலி பெண் பன்னாட்டு மாசுட்டர் பட்டத்தைப் பெற்றார். அக்டோபர் 2016 இல், இவர் இந்தியாவில் 16-அகவைக்குட்பட்டோரில் இரண்டாவது இடத்தையும், உலகின் 12-ஆவது இடத்தையும் அடைந்தார். அந்த நேரத்தில், அவர் 2300 என்ற எலோ மதிப்பீட்டைக் கொண்டிருந்தார்.


The 2024 Candidates Tournament will be an eight-player chess tournament, held to determine the challenger for the 2024 World Chess Championship match. It is scheduled to be held from 2 April to 25 April 2024 in TorontoCanada, alongside the Women's Candidates Tournament.[1][2]

As with every Candidates tournament since 2013, it will be a double round-robin tournament.[3] The winner of the tournament will earn the right to play the World Chess Championship 2024 against the current World Chess Champion Ding Liren.


பிரக்ஞானந்தா 2013-இல் உலக இளைய சதுரங்க போட்டியில் 8 வயது பிரிவில் வென்று பிடே மாசுட்டர் என்ற பட்டத்தைப் பெற்றார். 2015-இல் 10-வயதுப் பிரிவில் போட்டியிட்டு வென்றார்.[10]

2016 இல், தனது 10 வயது 10 மாதம் 19 நாட்களில், வரலாற்றில் மிக இளையவராக அனைத்துலக சதுரங்க மாசுட்டரானார். அங்கேரியின் பிரபல சதுரங்க வீராங்கனை யூடித் போல்காரின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்து இச்சாதனையைப் புரிந்தார்.[11][12] 2017 நவம்பரில் உலக இளையோர் சதுரங்க வாகையாளர் போட்டியில் 8 புள்ளிகளுடன் நான்காவதாக வந்து தனது முதலாவது கிராண்ட்மாசுட்டர் நோர்ம் பட்டத்தைப் பெற்றார்.[13] தனது இரண்டாவது நோர்ம் பட்டத்தை 2018 ஏப்ரல் 17 இல் கிரேக்கத்தில் நடந்த போட்டித்தொடரில் வென்றார்.[14] 2018 சூன் 23 இல் தனது மூன்றாவதும் இறுதியுமான நோர்ம் பட்டத்தை இத்தாலியில் நடந்த திறந்த போட்டியில், கிராண்ட்மாசுட்டர் மொரோனி லூக்காவை எட்டாவது சுற்றில் வென்று, தனது 12 ஆண்டு, 10 மாதம், 13 நாட்கள் அகவையில் செர்கே கரியாக்கினுக்குப் பின் (கரியாக்கின் 12 ஆண்டுகள் 7 மாதங்களில் பெற்றார்), கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை வென்ற இரண்டாவது இளையவர் என்ற பெருமையைப் பெற்றார்.[15][16][17] அபிமன்யூ மிசுரா,[18] செர்கே கரியாக்கின்குகேசு, சவகீர் சிந்தாரொவ் ஆகியோருக்குப் பின்னர் கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை வென்ற ஐந்தாவது-இளைய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.[19]

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...