Thursday, September 14, 2017

ஆண்டாண்டு அடுக்களையில் நின்னு 
வேண்டியதெல்லாம் சமைச்சாச்சு 
வித விதமாய் சுவைச்சாச்சு .

பெத்தவங்க கிட்டே 
கத்துக் கொண்டது போக
புத்தகம் பார்த்தும
புதுசா நிறைய படிச்சாச்சு.

மகளுக்கு பருப்பு சாதம்
மகனுக்கு கார கிரேவி
யாருக்கு என்ன பிடிக்கும்
என்பதெல்லாம்
மனப்பாடம் செஞ்சாச்சு

எனக்கென்ன பிடிக்கும ?

என்னையே கேட்கையில்
அடிநாக்கில் தங்கி விட்ட
ருசியொன்றை
அசை போட்டது மனசு.

மசக்கை காலத்தில்
மயங்கி இருக்கையில்
கணவர்
புகட்டிய
பொறுக்கும் சூட்டில்
அரிசிக் கஞ்சி
உறைப்பும்
புளிப்புமாய்
புளித் துவையல். ..!



வயதறியா மனம்

சாளரத்தின் வழி
சங்கீத
பறவை இசை ..

அறையின் மென் குளிர் 
விரல் தொட்டு
துயில் எழுப்ப

வயதறியா மனம்
ஒரு வரம் ..
இங்கு
வாழ்வென்பது
சுகம் ..!

மென் நுரை துப்பிய
சின்ன சின்ன  சங்கு
வெண் சிப்பிகளைப்
சேலைத் தலைப்பில்
சேகரிக்கிறேன்   
ஓதம் விரவிய
மணற் படுகையில்
ஓடும் கருநண்டு
விரல் தொடும் என
விலகி விலகி
நடக்கிறேன்.
வண்ணக்
குடை நிழலமர்ந்து
கடல்  மீன்களைக்
கணக்கெடுக்கிறேன்

மேலிருந்து  
நீலம் தோய்த்த
வான்மேகம்
உடன் தொடர

ஆழ்கடலை ரசிக்கிறேன்


பிசுக்கு வாணலியின்
அழுக்கை
அழுந்த அழுந்த
தேய்த்துக் கொண்டே ,,!

இனிய ஞாயிறு
அன்பெனபதே 
அணிகலனாய்
அன்பென்பதே
படைக்கலனாய்
அன்பென்பதே 
பலமாய் ,
அன்பென்பதே
வரமாய்
அன்பென்பதே
இடறி விழும்
பலவீனமாய்
அன்பென்பதே
அனைத்துமாய்
ஆனதிந்த வாழ்வு
பின்னிரவில் விரலகள்
பிணைத்த நேரம்

அழகிய 
சொல்லொன்று 
சொல்லெனறேன்

நாம் என்றாய்

பழகிய சொல் ஏன்?
இணையான
சொல் சொல் என்றேன்

இணையேதும்
இல்லாத
நாம் நாம்தான் என்கிறாய்

அடடா
யணங்கள் முடிவதுண்டு..
நினைவுகளை 
நெஞ்சில் நிறைத்து

கப்பலுக்கும் , படகுக்கும் மாற
நான் தடுமாறுகையில்
கை கொடுத்த
கைகள்

அம்மாவின் இடுப்பிருந்து
என் கண் பார்த்து
சிரித்த பொக்கை வாய் பாப்பா

கடலில் நனைந்த
உடைமாற்ற
இடம் தந்த
கடைக்கார பெண்மணி

பெட்டி தூக்க
சமைக்க
பரிமாற
அறை சுத்தம் செய்ய
என
நீண்ட உதவிக்கரங்கள்

வாழ்க்கை போலவே
மனிதரைச் சார்ந்தே
பயணங்களும்

நலமுடன் திரும்பி
வழக்கங்களுக்கு மாறியாச்சு

# அந்தமான் பயணப்பதிவு 20
இப்போதைக்கு
முற்றும்
கோரைப் பாயை
ஊடுருவும்
மண்தரையின் ஓதம்

நடுக்கும் குளிரை 
அதிகமாக்கும்
அம்மாவின்
பழஞசேலை

மரத்து விறைத்த
விரல்களை
இயல்பாக்க
விறகடுப்பின
கங்குகள்

தாழ்வார க்மபியில்
இரவெல்லாம்
தண்ணீர் சொட்டும்
ஒற்றைச் சீருடை
உடல் சூடடில் உலர

எதற்கும் மேலாய்
மசி எழுத்துகள்
கலைந்த
பதிவேடு

பள்ளி காலத்து
மழை
அழைத்து வரும்
அழுத்தங்கள்

இன்று கவிதைதனை
தந்தாலும்
அன்று கவலைகளை
பரணிலும்
இடமற்ற
பயன்பாடற்ற
பாண்டங்கள்
வழக்கொழிந்த 
சுளகுகள்
ஓங்கி
உரைப்பதெல்லாம்
இன்று
உச்சியில்
உள்ளதெல்லாம்
நாளை
குப்பையில்.!
அழகென்பது
அணிகலனிலா?
நெற்றிியில் 
அறிவும்
நெஞ்சில் 
துணிவும்
நேர்மை
உழைப்பைச்
சூடிய பெண்மை
எந்நாளும் அழகே
அலைகளில் 
அலைந்து
கடுங்காற்றில்
கலைந்து
திசை தேடி
திசை தேடி
பயணம்
துவங்கிய
கரையில்
தரை தட்டி
நிற்கும்
எனது படகு
கவியத் துவங்கும்
மாலைப் பொழுது
சின்ன மழலையின்
சன்னமான கேவலென
மென்குரலில்
அழத்துவங்கும் மழை
சன்னலோர
மரங்கள்
பின்தொடர
இலகுவாக்கும்
பயணமும்
இளகிக் கிடக்கும்
மனமும்
விரிக்கும் கரங்களில்
நீர்
குவிக்கும் மலர்களில்
தேடித்தேடி
முட்களைச் சேர்த்து
என்
தலையில் கவிழ்க்கிறேன்.

இலையோ சருகோ
குருத்தோ
எதுவென்ற போதும்
குறுக்கே பொருத்தி
சிலுவை அமைக்கிறேன்

வரமென வந்தவற்றின்
குறைகளை
ஆய்ந்தே
வாழ்க்கை கடக்கிறது.!

ஆயினும
உடன்
நீர்
இருக்கும்
உணர்வினிலே
உள்ளம் நிறைகிறது
உளம் வருடும்
மயிலிறகு நினைவுகளில்
உயிர்ப்புடன் இந்நாள்
நலமில்லா பொழுதின்
தலைக் கோதல் போலே

தண்ணீர் தண்ணீர்

இளம் பிராய
நினைவுகளின் அடுக்கில்
குருதி கசிய
வியாபித்திருக்கும
நீர்த் தேடல்

பொதுக் கிணறு
தெருக்குழாய்
ஆற்றங்கரைகளில்
பதிந்த
வெற்றுக்கால்களின்
தடங்கள்
விளம்பிடும்
வேதனைக்கதைகள்

அரிசியை
பருப்பைத் தாண்டியும
அம்மாக்களின்
முழு முதற் கவலை
அன்றன்றுக்கான
தண்ணீர்

இன்றும்
அடிப்பமபை
அடித்தடித்து
காய்த்துப போன
கரங்களில்
காயந்துக் கிடக்கிறது
அவர்களின
தண்ணீருக்கான
கண்ணீர்!
# உலக தண்ணீர் தினம்
பின்னிரவில் 
துயில் கலைய
பீதியுடன்
அரையொளியில்
மனப்பலகையில்
பெருக்கியும்
வகுத்தும்
விரல் மடித்துக்
கூட்டியும்
விழி பிதுங்கச்
செய்யும்
விற்பனை இலக்குகள்!!
மோனா... மோனா..மோனா..."
பல்லவி...முதல் சரணம்

அதன் பின்
" நான் மெர்சலாயிட்டேன்.." 
இதில் பல்லவி , ஒரு சரணம்..

தொடர்ந்து
" ஊ...தா கலர் ரிப்பன்.."
பல்லவியை
மகள் இழுக்கையில்
பாப்பா தூங்கி இருந்தாள்..

தலைமுறைகள்
மாறும்போது
தாலாட்டும் மாறுகிறது
# ரியா

சுட்டுவிரலின்
வெட்டுக் காயம்.!
உதட்டில் தெறித்த
சுட்ட எண்ணை ..
நழுவி சிந்தி
காலில் விழுந்த
குழம்பின் கொதிப்பு..
நெடி மிளகாய்
அரைக்கையில்
அடுக்காய் வரும்
தும்மல். ..இருமல்.. !
தினம் இல்லை ..!
சிதறிடும் கவனத்தை
பதிவிடும் குக்கர் சூடு..!
வழியும் வியர்வை யுடன்
சமைத்ததை
மேசையில் விரிக்கையில்
மகன் சொல்வான்..
"பார்க்கலையா அம்மா ..
முழங்கையில் மாவு. ! "
" ஒ ..மௌன வலிகளின்
அடையாள தீற்றல் . !
துடைத்து நகர்கிறேன்....
அடுத்தவேளை சமைக்க..!

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...